ஞானசார தேரரின் தலைமையில் ஜனாதிபதி செயலணி

ஞானசார தேரரின் தலைமையில் ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட பணிக்குழுவின் தலைவராக கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். “இலங்கையினுள் ஒரே நாடு, ஒரு சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றை தயாரித்தல்” உள்ளிட்ட பெறுப்புகள் குறித்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன.