மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப்பலகைகளை அகற்றிய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கிராண் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். அவர், திங்கட்கிழமை (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.