வெள்ளம்: ‘பாகிஸ்தான் மாவட்டத்தில் 200 பேரைக் காணவில்லை’

வட மேற்கு பாகிஸ்தானின் மாவட்டமொன்றில் பேரழிவை ஏற்படுத்திய பருவகால வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக 200க்கும் அதிகமானோரைக் காணவில்லையென அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மிரில் அண்மைய நாள்களில் திடீர் வெள்ளங்களால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.