5 பில்லியன் அமெரிக்க டொலரை முதலிட சீனா முன்வந்துள்ளது

அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா தயாராகியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் கூறியுள்ளார். ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீன தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.