யாழ்ப்பாணத்தில் வருகிறது கிரிக்கெட் மைதானம்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானங்களை அமைக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, கிரிக்கெட் அதிகம் பரவியிருக்காத இலங்கையின் பகுதிகளில், கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. மேற்கூறப்பட்ட இரண்டு மைதானங்களும் அமைக்கப்படுவதற்கான அனுமதியை, இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுச் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. அண்மைய எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மேற்படித் திட்டங்களுக்கு, 200 மில்லியன் ரூபாய் செலவிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

(“யாழ்ப்பாணத்தில் வருகிறது கிரிக்கெட் மைதானம்” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிறுத்தப் போராட்டம்

2 செப்டம்பர் 2016, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக பெருந்தொகையான உழைப்பாளிகள் கலந்து கொண்ட மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் நடந்த வேலைநிறுத்தத்தில், தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு செய்தனர். உலக சனத்தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நாடென்பதால், பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் இதுவாக இருக்க வேண்டும்.

(“சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிறுத்தப் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் முஸ்லீம் இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கில் ஆயுதங்களைக் கொடுத்தது வேறு எவருமல்ல- ஹிஸ்புல்லா

இலங்கையில் முஸ்லீம் இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கில் ஆயுதங்களைக் கொடுத்தது வேறு எவருமல்ல… நானே தான்…முன்னாள் இலங்கை முஸ்லீம் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் இரகசிய வீடியோ.

(“இலங்கையில் முஸ்லீம் இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கில் ஆயுதங்களைக் கொடுத்தது வேறு எவருமல்ல- ஹிஸ்புல்லா” தொடர்ந்து வாசிக்க…)

‘கட்டுநாயக்கவை கட்டியெழுப்புவோம்’

கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள், ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நீண்டகாலத் திட்டங்கள், ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

(“‘கட்டுநாயக்கவை கட்டியெழுப்புவோம்’” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்த வேலிகள்..(24)

(உலகை உறைய வைத்த இரத்த சகதி)

14.08.2006 ( இன்றைக்கு சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு) பொழுது புலரத்தொடங்கியது. புலிகளால் ஆயுத பயிற்சிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்களையும் மாணவிகளையும் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்க தீர்மாணித்த புலிகள் அதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை தொடங்குவதற்கு தயாராகிவிட்டனர்.

(“பயிரை மேய்த வேலிகள்..(24)” தொடர்ந்து வாசிக்க…)

கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று,கூறியவருக்கு

காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.காரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்…. இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள்.

(“கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று,கூறியவருக்கு” தொடர்ந்து வாசிக்க…)

‘பிரபாகரனும் இல்லை மஹிந்தவும் இல்லை’

‘யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உயிர்வாழ்பவர்கள் மத்தியில் இல்லை. அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆகையால், பிரச்சினைகளை என்னுடன் இலகுவாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

(“‘பிரபாகரனும் இல்லை மஹிந்தவும் இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(23)

( தேவனாலும் மறவனாலும் குறி வைக்கப்பட்ட மாணவர்கள்.)

முழு அளவினான போர் தொடங்கி இரண்டு நாட்களே கடந்திருந்த நிலையில், விமானப் படையினரும், தங்களது தாக்குதல்களை இப்போது முழுமையாக தொடக்கியிருந்தனர். முன்னைய ஈழப்போர் போன்று அல்லாமல், ஈழப்போர் நான்கில் புலிகளைவிட , இராணுவத்தினரின் கை மோலோங்க ஆரம்பித்திருந்தது. இராணுவம் தரை வழித் தாக்குதல்களை வடக்கில் தொடங்காத போதும், விமானப் படையினர் மூலம் வன்னி வான் பரப்பை மாத்திரமல்லாமல், முழு நாட்டினது வான் பரப்பையும் , 24 மணி நேரமும் தமது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயன்று கொண்டிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(23)” தொடர்ந்து வாசிக்க…)

காணாமல் போனாரா பிரபாகரன்?

தமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது.

(“காணாமல் போனாரா பிரபாகரன்?” தொடர்ந்து வாசிக்க…)

நீலக்கடலானது குருநாகல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிய மாநாடு மாலை 5.30க்கு நிறைவடைந்தது.

(“நீலக்கடலானது குருநாகல்” தொடர்ந்து வாசிக்க…)