வாட்ஸ் அப் புதிய ஸ்டிக்கர் பேக் அறிமுகம்: உலக சுகாதார மையத்துடன் இணைந்து முயற்சி

உலக சுகாதார மையத்துடன் இணைந்து, ‘வீட்டிலேயே இணைந்திருப்போம்’ (Together at home) என்ற தலைப்பில் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

வவ்வால்கள் மீதுஏன் இந்த வீண்பழி?

(மு. மதிவாணன்)

எப்பொழுதெல்லாம் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றுகிற வைரஸ் நோய்கள் (Zoonotic Diseases) வருகின்றனவோ அந்த நேரத்தில் காட்டுத்தீபோல் வவ்வால்கள் குறித்த எதிர்மறையான செய்திகளும் தேவையின்றி பரப்பப்படுகின்றன. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸும் வவ்வால்களை விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக நிறைய செய்திகள் சமூகவலைத் தளங்களில் மட்டுமல்லாமல் ஊடகங்களிலும் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன. வவ்வால்கள் மீது சுமத்தப்படும் வீண்பழி இது.

வானம் தனது நீல நிறத்தை மீட்டுக்கொண்டது!

ஆதியில் வானம் நீலமாகத்தான் இருந்தது. அண்மையில், வாகனங்களின் புகையும் தொழிற்சாலைகளின் புகையும் இந்த நிறத்தைத் திரித்துவிட்டதால் வானத்துக்கு ஒரு புரிபடாத நிறம். கரோனா காலத்து ஊரடங்கில் வானம் நீல வானமாக மீண்டுகொண்டது. உதயத்துக்குப் பிறகு மேலை வானத்தில் பார்க்காத நீலம் ஒன்று படர்ந்துகொண்டே மெல்ல அடர்வதையும் பார்க்கலாம்.

’விவசாயத்தின் மூலம் தன்னிறைவு அடைவோம்’

“எமது விவசாயத்தின் மூலம் தன்னிறைவு அடைவது மற்றுமன்றி நமது உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நமக்கு சிறந்த சந்தர்ப்பத்தை உருவாக்குவதே எனது நோக்கம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கிம் கடும் நோய்வாய்ப்பட்டுள்ளமை: சந்தேகிக்கின்றன தென்கொரியா, சீனா

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் இருதய சத்திரசிகிச்சையொன்றுக்கு உள்ளானதுடன், கடுமையான ஆபத்திலிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து தலைவர் கிம் நோய்வாய்ப்பட்டுள்ள அறிக்கைகளில் தென்கொரிய சீன அதிகாரிகள் இன்று சந்தேகித்துள்ளனர்.

பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 4)

(சாகரன்)
கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது.

கொரனா வைரஸ் ஐ கட்டுப்படுத்துவதில் சீனாவும், தென்கொரியாவும் அதிகம் பேசப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று இவ்விரு நாடுகளும் குறுகிய காலத்திற்குள் அதிகளவிலான கொரானா வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்பதாலே.

ஜூன் 20இல் பொதுத் தேர்தல்: வர்த்தமானி வௌியீடு

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 3)

(சாகரன்)

கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது

கடுமையான தொடர்பு – தடமறிதல் (contact-tracing process) செயற்பாடுகள்:

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தொடர்பு – தடமறிதல் செயல்முறை மூன்று படிகளை உள்ளடக்கியது: வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என்று சந்தேகிக்கப்படும் 1. நோயாளரை அடையாளம் காணுதல், 2. நோயாளர் பற்றி தகவல்களை திரட்டுதல் மற்றும் 3. நோயாளரைப் பின் தொடர்ந்து அவதானித்தல் ஆகும். கோவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட, சந்தேகத்திற்கிடமான மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார வல்லுநர்கள், பொதுப் பாதுகாப்புப் பணியாளர்கள், இராணுவம் மற்றும் அரசு ஊழியர்களைப் பயன்படுத்தி சமூகத்திலிருந்து விரைவாக இனம் கண்டு தனிமைப்படுத்துவதில் வியட்நாம் அரசு வெற்றி கண்டது.

பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 2)


(சாகரன்)

கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது

வியட்நாம் கையாண்ட அணுகு முறையை சற்று விரிவாக பார்ப்போம்:
ஏப்ரல் 16 ஆம் தேதி நிலவரப்படி, 95.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நாடான வியட்நாமில் 268 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் – 19 தொற்றாளர்கள், 171 வைரசில் இருந்து மீட்கப்பட்டவர்கள், 1,35,938 மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் மற்றும் பூஜ்ஜிய உயிரிழப்புகள் என்பன பதிவாகியுள்ளன. கோவிட் – 19 தொற்று நோயால் எந்த மரணமும் ஏற்படாததாகக் கூறப்படும் மிகச் சில நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும். இது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டி விடயமாகும்.

’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட தேவையில்லை’

(ஏ.சி.எம் பௌசுல் அலிம்)

ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.