முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்ட சிறுவன், தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும் ஆயர் பொறுப்பேற்பு

பசறை பதின்மூன்றாம் கட்டைப் பகுதியில், கடந்த சனிக்கிழமை(19) இடம்பெற்ற கோர விபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் குடும்பத்தாரின் விருப்பத்தின்பேரில் பதுளை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய வின்சன் பெர்னாண்டோ அடிகளார் பொறுப்பேற்றுள்ளார் என்று, குறித்த பிள்ளைகளின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஈழப்போர் பற்றிய ஜெர்மன் ஆய்வாளரொருவரின் (Mathias Keittle) கருத்து

மிகவும் சிக்கலான உலகத் தொடர்புகளுடன் மிகமோசமான பயங்கரவாதக்குழு ஒன்றினை இலங்கை அழித்தபோதிலும் அதற்கான உரிய பலன் இலங்கைக்குக் கிடைக்கவில்லை. உலகில் வேறெங்கிலும் இல்லாதவாறு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 பேரை மீளக்குடியமர்த்துவதில் இலங்கை வெற்றியடைந்துள்ளது. அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உணவளிப்பதற்கு வேண்டி, பட்டினியால் வாடும் குழந்தைகளென இலங்கையில் கிடையாது என்பது கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது. பெருந்தொகையில் மக்கள் அவலம், தொற்று நோய்கள் மற்றும் பட்டினி போன்றவற்றை இலங்கை தவிர்த்துள்ளது என்பதை மேற்குலகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றது. பயங்கரவாதத்தை ஒழித்த அதேவேளையில், ஓர் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்று பார்த்தால், பொறாமை கொள்ளத்தக்க வகையில் சமூக பொருளாதார தரத்தை இலங்கை அடைந்துவிட்டது. எனினும் அதற்கான எந்த அங்கீகாரமும் இலங்கைக்குக் கிடைக்கவில்லை. ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களின் அங்கீகாரத்தை இலங்கை அரசும், அதன் ஜனாதிபதியும் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றனர். ஆயினும் அது நிராகரிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் பொருளாதாரம் இயல்பான செயற்பாடு கொண்டதாக இருக்கின்ற போதிலும், மேற்குலகினால் ஊக்குவிக்கப்படாமல் உள்ளது.


பின்னணி: 27 ஆண்டுகால குருதிதோய்ந்த மோதலுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுமையான தோல்வியுடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. ‘வொண்டர்லாண்ட்டில் அலிஸ்’ (Alice in Wonderland) என்ற திரைப்படக்காட்சி போன்று, நாடு எல்லையற்ற அச்சமும் நிச்சயமற்றதுமான ஒரு சூழலிலிருந்து, அமைதிக்கும் முழுமையான தணிவுக்கும் ஒரே இரவில் மாறியது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு வந்து, ஒப்பிட முடியாத மகிழ்ச்சியைக் கொண்டாடினர். உணவக உரிமையாளர்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த வீதிகளில் சென்ற அனைத்து வழிப்போக்கர்களுக்கும் தாமாகவே உணவு வழங்கினர்.

இலங்கை: கொரனா செய்திகள்

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில், சகல வகுப்புகளையும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை சுகாதார பணிப்பாளர் நாயகம் வழங்கியுள்ளார்.

மியான்மாரில்…..

குறைந்தது 50 ஆர்ப்பாட்டக்காரர்களை இன்று மியான்மாரின் பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றதாக செய்தியறிக்கைகளும், சம்பவத்தைக் கண்ணுற்றவர்களும் தெரிவித்துள்ளனர். அந்தமான் கடலில் தத்தளிக்கும் படகிலுள்ள 81 றோகிஞ்சாக்கள் குறித்து தகவலை வழங்க இந்தியா, பங்களாதேஷ், மியான்மார் தவறியுள்ளதாக, இந்தியாவைத் தளமாகக் கொண்ட, அந்நாட்டுத் தலைநகரிலுள்ள றோகிஞ்சா மனித உரிமைகள் முன்னெடுப்பு நேற்றுத் தெரிவித்துள்ளது.  

மோடிக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஐவர் கொல்லப்பட்டனர்

கிழக்கு பங்களாதேஷில், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் நேற்று குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாகவும், டசின் கணக்கானோர் காயமடைந்ததாக வைத்தியசாலை வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா அதிரடி: தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.

திட்டமிட்டு நஞ்சை ஊட்டாதீர்

எதிர்கால சந்ததியினர் மீது திட்டமிட்டு நஞ்சை ஊட்டாதீர்

ஒவ்வொன்றுக்கும் எதிர்வினை நிகழத்தான் செய்யும். அதில் பெரும்பாலானவை இயற்கையாகவே இடம்பெறும்; வேண்டுமென்றே, திட்டமிட்டு ​செய்யப்படும் எதிர்வினைகள் பலவாகும். அவற்றைத் தடுத்து நிறுத்துவதென்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. ஏனெனில், அவ்வாறான செயல்களில் பலவற்றுக்குப் பின்னால், அரசியல் ஒழிந்தே இருக்கிறது.

இந்திய மீனவர்கள் 20 பேர் இரணைத்தீவில் கைது

கிளிநொச்சி – இரணைத்தீவு கடற்பரப்பில், நேற்றிரவு (24), இரண்டு றோலர் படகுகளில் வருகைதந்திருந்த 20 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்துக்கொண்டிருந்த போதே, கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள், கிளிநொச்சி மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று (25) ஒப்படைக்கப்படுள்ளனர்.

’சிறுபோகத்தில் விதை நெல் உற்பத்தியில் ஈடுபடுங்கள்’

கிளிநொச்சி மாவட்டத்தில், விதை நெல்லுக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, சிறுபோகத்தின் போது, விதை நெல் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட வேண்டுமென, கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் எஸ்.அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.