கிழிந்த இதயங்களை குணப்படுத்த மருந்து வேண்டும்

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிறைவடைந்து மே.18 ஆம் திகதியுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. வடக்கு,கிழக்கு, கொழும்பு மற்றும் கடல் கடந்த நாடுகளில், நினைவு தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தங்களுடைய உறவுகளுக்குத் தீப சுடரேற்றி, மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால், கண்ணீர் மழையில் நனைந்தது.

“இலங்கையில் சைபர் பாதுகாப்பு ஆணையம்”

இலங்கையில் முன்மொழியப்பட்ட சைபர் பாதுகாப்பு சட்டத்தை விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

“அப்பா, உங்கள் நினைவுகள் என்னை வழிநடத்துகிறது”: ராகுல் காந்தி

“அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறா கனவுகளை நிறைவேற்றுவதே எனது தீர்மானம். அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.” என்று ராஜீவ் காந்தி நினைவு தினத்தை ஒட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கொழும்பு கால்வாய்களை புனரமைக்க ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.

கொக்கிளாய் விபத்தில் சிறுமி மரணம்

முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணி பகுதியில், பாடசாலைக்கு அருகில், புதன்கிழமை (21) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்தில் அரசியல்வாதிகளால் காணிகள் சுவீகரிப்பு

அனுராதபுரத்தில் உள்ள நுவர வெவ வனப்பகுதிக்குச் சொந்தமான நிலங்களை சுமார் 712 அரசியல்வாதிகள் கையகப்படுத்தி, நீச்சல் குளங்களுடன் கூடிய வீடுகள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டியுள்ளனர் என்று துணை அமைச்சர் சுசில் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இன்று தெரிவித்தார்.

கெஹெலியவின் மகனும் சந்தேகநபர்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அவர்களைப் பராமரிக்கவும் அமைச்சின் நிதியில் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் வின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல,சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

“பிரதமர் ஹரிணிக்கு மரண அச்சுறுத்தல்”

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  பாராளுமன்றத்தில், இன்று (20) தெரிவித்தார்.

குறைந்த வருமான வைப்பாளர்களுக்கு நிவாரணம்

குறைந்த வருமானம் கொண்ட வைப்புத் தொகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்கான திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.