சஜித் அணியில் மூவர் இராஜினாமா

மாத்தளை மாவட்டத்தில் சமகி ஜன பலவேகயவின் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரத்தொட்ட அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார். அதன்படி, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான அமைப்பாளர் சம்பிகா விஜேரத்ன மற்றும் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். கட்சியால் ஏற்பட்ட பல்வேறு தாமதங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மேலும் பலர் தங்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்தார்

போதைப்பொருள்: விசேட சுற்றிவளைப்பில் 475 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு

3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 08 விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வரலாற்றில் அதிகளவான தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என அமைச்சு கூறியுள்ளது. 

’உப்பு’ தொடர்பில் தகவல்

அடுத்த வாரம் முதல் தட்டுப்பாடின்றி உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு பதில் அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

’’குஷ்’’ போதைப் பொருளுடன் நால்வர் கைது

சுமார் 7 கோடியே  50 இலட்சம்  ரூபாய் பெறுமதியுடைய  “குஷ்” போதைப் பொருளுடன் “ரெட் சேனல்” ஊடாக  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து     வெளியே கொண்டு செல்ல முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீர் கட்டணம் எப்போது உயர்த்தப்படும்?

நீர் கட்டண உயர்வு ஏற்படக் கூடிய சாத்தியத்தை குறிப்பிட்டு, ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நீர் கட்டண உயர்வு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசகவலை எழுப்பியுள்ளார்.

வடக்கில் காணி சுவீகரிப்பு வர்த்தமானி ;வௌ்ளியன்று பேச்சு

வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் சுவீகரிப்பு தொடர்பில், மார்ச் மாதம் அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில், பாராளுமன்றத்தில், வெள்ளிக்கிழமை (23) அன்று முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

பூவரசங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

மாதாந்த உணவுக் கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு

பாராளுமன்றத்தின் பொது ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்களுக்கான பல கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ள சூழலில், உணவுச் செலவுகளை ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் அதிகரிப்பது நியாயமற்றது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பாராளுமன்ற ஊழியர்களுக்கான மாதாந்த உணவுக் கட்டணம் இதுவரை 1000 ரூபாயாக இருந்து வருகிறது. பாராளுமன்ற அவைக் குழு எடுத்த முடிவின்படி, பொது ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் 3,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மாகாண சபை தேர்தல்: சில நடைமுறை யதார்த்தங்கள்

(மொஹமட் பாதுஷா)

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, மாகாண சபைத் தேர்தல் பற்றிய உரையாடல்கள் தொடங்கியிருக்கினிறன. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்திற்குள் நடக்குமா? நடக்காதா? என்ற விவாதங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.