IPL காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.  

ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம் வௌியானது

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்தனர். 

மாணவி மரணம் : ஆசிரியர் குறித்து எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ‘பி’ அறிக்கை பெற்ற பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உள்ளக விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய ஆசிரியர் எமக்கு வேண்டாம்: புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் தங்களுடைய பாடசாலைக்கு வேண்டாமென்று அப்பாடசாலையின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி அம்ஷிகா விவகாரம்- சந்தேக நபர் NPP யின் அமைப்பாளர்

பாலியல் வன்புணர்வுக்கு பின்னர், மனஉளைச்சலுக்கு உள்ளாகி  தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியை தனியார் வகுப்பு நிறுவனத்தில் இழிவுபடுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படும் குறித்த நிறுவன ஊழியர், மத்திய கொழும்புக்கான தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்

கத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக வத்திகானில் நேற்று (07) 250 கர்தினால்கள் குவிந்த நிலையில், 80 வயதிற்கு உட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றனர். 

பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான், காஷ்மீரில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய இராணுவம் எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் அவை சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் வெளியிடப்படாதது ஏன்?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

நாட்டில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் முழுமையாகவே இன்னமும் வெளியிடப்படாதமையால் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா, ஏற்பட்டு இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய இது சந்தர்ப்பமல்ல.

ஏழு மாதங்களுக்குள் செல்வாக்கை இழந்த அரசாங்கம்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று, மே 7ஆம் திகதியுடன் ஏழு மாதங்கள் நிறைவடைந்தன. பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று, ஆறு மாதங்கள், நிறைவடைந்துள்ளன.

“ஜூன் 2க்கு முன் மேயர்களை நியமிக்கவும்”

உள்ளூராட்சி அமைப்புகளில் 50% க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் மேயர்களை நியமிக்கவும், நியமிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அறிவிக்கவும் தேர்தல் ஆணைக்குழு  எதிர்பார்த்துள்ளதாக்கத் தெரிவித்துள்ளது.