பகிடிவதை தாங்க முடியாமல் வாவியில் குதித்த மாணவி

குளியாப்பிட்டி, தொழில்நுட்ப கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல், கல்லூரிக்கு அருகில் உள்ள வாவியில் குதித்துள்ளதுடன், பிரதேசவாசிகளால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய தலைவராக பேராசிரியர் KTM உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.பேராசிரியர் ஹேமபால எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.  அவர் ஒரு புகழ்பெற்ற கல்வியாளரும் என்பதுடன், முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் பேராசிரியர் மற்றும் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாணவி பாலியல் துன்புறுத்தல்: ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

தம்புத்தேகமவில் ஏ-தர கிரிக்கெட் மைதானம் ?

தம்புத்தேகமவில் ஏ-தர மைதானத்தை அபிவிருத்தி செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அசோக சேபால கைது

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் நகர முதல்வர் அசோக சேபால, அரசாங்கத்துக்கு 2.38 மில்லியன் ரூபாவை நட்டத்தை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டதாரிகள் திருமலையில் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் திங்கட்கிழமை (02) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையில் பயணிகள் விமான சேவை

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

பேரவை மற்றும் கூட்டணி இடையில் ஒப்பந்தம்

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று திங்கட்கிழமை (02) கைச்சாத்திடப்பட்டது.

ஒரு பில்லியன் செலவை அம்பலப்படுத்திய கோப் குழு

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) புலப்பட்டது.

24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்

சவுதி அரேபியாவின்’Vision 2030′ திட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுகாதாரத் துறை மாற்றத் திட்டம் மற்றும் ஹஜ் பயண அனுபவ மேம்பாட்டு திட்டத்தின் கீழாகவும், சுகாதார அமைச்சகம் “சேஹா டிஜிட்டல் வைத்தியசாலை” மூலம் ஹஜ் பயணிகளுக்காக 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்கியுள்ளது.