”ஒரு வருடத்திற்குள் 70 நாடுகளுடன் ஒப்பந்தம்”

தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் முதல் வருடத்திற்குள் இலங்கை பல்வேறு நாடுகளுடன் 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  20 தெற்காசிய நாடுகள், 19 கிழக்கு ஆசிய நாடுகள், 15 ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள், நான்கு மத்திய கிழக்கு நாடுகள், நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் நான்கு கரீபியன் பிராந்திய நாடுகளுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

200 ரூபாவை எதிர்த்தவர்களின் கொடும்பாவி எரிப்பு

பெருந் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அரசியல் வாதிகளை கொடும் பாவி எரித்தனர்.அத்துடன் சவப்பெட்டி ஏந்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், மஸ்கெலியா பேருந்து நிலையத்தில்ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது.   

ரூபாய் 200 சம்பள உயர்வும் சஜித்தும்

தோட்டத்தொழிலாளர்களுக்கு பட்ஜெட்டின் ஊடாக 200 ரூபாய் வருகைக்கான கொடுப்பனவு அரசாங்கத்தால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. இதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ​ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒருசில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்னர். 

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.

அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் வைக்கப்பட்டது…?

திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை,அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. அந்த புத்தர் சிலை, திங்கட்கிழமை (17) பிற்பகர் 1,30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. 

விவசாயிகள், விளைநிலங்கள், நுகர்வோரை பாதுகாக்கவும்

அறிவியல், பரந்த கொள்கை மற்றும் நிலையான, நடைமுறை தீர்வுகள் தேவைப்படும் மிகவும் உணர்திறன் வாய்ந்த பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியான மற்றும் விவேகமற்ற தீர்வுகளை வழங்குவது அந்த சிக்கல்களை மேலும் மோசமாக்கும். அல்லது வேறு பல பிரச்சினைகளை உருவாக்கி வேறு முகத்தை எடுக்க வேண்டும். 

அமீபா மூளை காய்ச்சல்: சபரிமலை பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது.

18 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய ராணுவ சேவை

ஜெர்மனி ராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜெர்மனி ராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வலிமையான ராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்தது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான புதிய நேர அட்டவணை வெளியீடு

தற்போதைய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக முஸ்லிம் பாடசாலைகளில் திருத்தப்பட்ட கால அட்டவணைகளை செயல்படுத்துவதற்கான புதிய பரிந்துரைகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மெக்சிகோவில் அரசுக்கு எதிராக தீவிரமடைந்த GenZ போராட்டம்

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.