1900 கிலோ கிராம் கலப்பட தேங்காய் எண்ணெய் சிக்கியது

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் அடங்கிய 3 பரல்கள் கைப்பற்றப்பட்டன. அதிலிருந்து 1900 கிலோ கிராம் தேங்காய் எண்ணெய் கைப்பற்றப்பட்டது.  அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை வியாபாரத்துக்காக வாகனம் ஒன்றில் எடுத்து வந்தவர்.

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச்சந்தை

பச்சிலைப்பள்ளி பளை பொது சந்தை கடந்த இரு தினங்களாக பெய்த கன மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி சந்தை நிலப்பரப்பு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது. 

உள்ளங்கையில் மறைக்கக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு , குரன பகுதியில், உள்ளங்கையில் மறைத்து வைக்கக்கூடிய சுமார் 6 அங்குல நீளமுள்ள சிறிய துப்பாக்கியுடன் தொழிலதிபர் ஒருவர்  கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி இதுவரை பாதுகாப்புப் படையினரிடமும் இல்லை என தெரியவந்துள்ளது.

மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது சய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 

புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நற்சான்றுப் பத்திரம் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

கிரிந்த-வில் சிக்கிய ஐஸ் போதைப்பொருளின் திடுக்கிட வைக்கும் பின்னணி

தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இவை இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் தரப்பினரும் நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பருமனை கட்டுக்குள் பெண்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியம்

பருமனாக இருப்பவர்கள் மெலியவும், மெலிந்தவர்கள் ஓரளவுக்குப் பருமனாக மாறவும் முயற்சி செய்கின்றனர். இதனால், மெலிந்த உடல் அமைப்பைக் கொண்ட ஒரு சிலர், பருமனாகி விடுகின்றனர். பல சுற்றுப் பருமனாக இருப்பவர்கள் அந்த முயற்சியை கை விட்டுவிடுகின்றனர். இதனால், இன்னுமின்னும் பருமனாகிவருகின்றனர்.

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸார் யாழ்ப்பாணம் கொக்குவில் கலட்டிப் பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 50 போதை மாத்திரைகளுடன்  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை சம்பவம் மேலும் இருவர் கைது

கொட்டாஞ்சேனையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.

சரணடைய வந்தார் துசித ஹல்லொலுவ

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் துசித ஹல்லொலுவ சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.