சமன் ஏகநாயக்க, இரண்டாவது சந்தேகநபர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க,  என்றழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க நீதிமன்றத்தில் புதன்கிழமை (28) அன்று  ஆஜரானார்.

பழக்கவழக்கங்களில்“உணவுப் பாதுகாப்பு ஓர் அங்கமாக வேண்டும்”

உணவுப் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, அவை பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக மாற வேண்டும்  என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ரணிலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மஹிந்தவின் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுக்கும் அனுர

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழர்களின் அடையாளங்கள், சன பரம்பலை குறைக்கும் செயற்றிட்டங்களை ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கங்கள் முன்னெடுத்து வந்தன.

முதற் தடவையாக $5,000ஐத் தாண்டிய தங்கம்

முதற் தடவையாக ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 5,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. அந்தவகையில் 2025-இல் 60 சதவீதம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. நிச்சயமில்லாத காலங்களில் முதலீட்டாளர்களால் வாங்கப்படக்கூடிய பாதுகாப்பான சொத்தாக தங்கம் காணப்படுகின்றது.

இளைஞர் சமூகத்தில் 39 சதவீதம் பேருக்கு மன அழுத்தம்

இலங்கையில் 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மன அழுத்தத்தின் பாதிப்பு 39 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, மேலும் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 100,000 பேர் ஆண்டுதோறும் தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர்    என்று தேசிய மனநல நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் தம்மிக்க அழகப்பெரும திங்கட்கிழமை 26) அன்று தெரிவித்தார்.

இடமாற்றத்திற்கு எதிராக அணி திரளும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

2026ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பாக அதிர்சியுற்றுள்ளதாகவும் இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  ஞாயிற்றுக்கிழமை (25) அன்று களுவாஞ்சிகுடியில் ஒன்று சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் ’பெர்ன்’ பனிப்புயல்: 17 பேர் பலி

அமெரிக்காவின் பல மாநிலங்களில் வீசி வரும் கடும் பனிப்புயல், உறைபனி மற்றும் குளிர் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் வானிலை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாமலுக்கு ஆஜராகுமாறு அழைப்பு

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் திங்கட்கிழமை (26) காலை 9.30 மணிக்கு ஆஜராகுமாறு  தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு 9.50 மணிக்கு சென்ற காவல்துறையினர் அறிவித்துள்ளனர் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

’’சம்பளம் போதாது’’ என்ற முழக்கம் மீண்டும் எழக்கூடும்

அரசு, தனியார் மற்றும் தோட்ட ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இறுதி முடிவு, ஒரு எளிய பட்ஜெட் வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், தொழிலாளர் மற்றும் அரசுக்கு இடையிலான மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சமூக ஒப்பந்தமாகவும் விளக்கப்பட வேண்டிய ஒரு தருணமாக மாறியுள்ளது.