தீவிரமடைந்த மருத்துவர் போராட்டம்; நோயாளர்கள் அவதி

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடந்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான நோயாளிகள் சுகாதாரப் பராமரிப்பை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

இறைச்சிக் கடைகளுக்கு நாளை பூட்டு

நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை(04)அன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையிலுள்ள 49 கைதிகள் புதன்கிழமை (04) அன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

பௌத்தத்தை அவமதிப்பதாக கூறி திருமலையில் ஆர்ப்பாட்டம்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பெளத்த சமயத்தை அவமரியாதைக்கு உற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கூறி திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக மூன்று பேர் வீதியில் அமர்ந்து திங்கட்கிழமை(2) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  டாக்காவில் உள்ள பூர்பாச்சல் நியூ டவுன் அரசுத் திட்டத்தின் கீழ் மனைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய இறக்குமதிக்கான வரியை குறைத்தார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு நிதியுதவி

2026 பட்ஜெட் மூலம் இலங்கைக்கு மொத்தம் 4 பில்லியன் இந்திய ரூபாய் உதவியை இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.

இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) காலை 11 மணிக்கு சமர்ப்பித்து உரையாற்றினார்.  இதன் மூலம் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.