அமெரிக்க டொலரில் ட்ரம்பின் கையெழுத்து

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, புதிய நாணயத்தாள்களில் ஜனாதிபதியின் கையெழுத்தைச் சேர்க்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வினைத்திறனான சேவைக்காக முல்லைத்தீவில் விசேட மாநாடு

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு அரச நிர்வாகத்தின் மூலம் மிகவும் வினைத்திறனான மற்றும் துரிதமான சேவையை வழங்குவதை இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்ட பிரதேச செயலாளர்கள் மாநாடு வியாழக்கிழமை (26) துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் அலிரேசா டங்சிரி! ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

போருக்கு நடுவே தைரியமாக முடிவு எடுத்த ஜப்பான்

மத்திய கிழக்கு மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் விலையுயர்வைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் ஜப்பான் அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இலங்கை – ரஷ்யாவிற்க்கிடையில் எரிசக்தி ஒத்துழைப்பு

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான எரிசக்தித் துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது அனைத்து வகையான இரத்த பிரிவுகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் ID சேவை இடைநிறுத்தம்

ஆட்கள் பதிவுத் துறையின் கணினி அமைப்பு இன்று (26) மீண்டும் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அத்தியாவசிய பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணினி அமைப்புச் செயலிழப்பு காரணமாக, ஒரு நாள் மட்டும் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் (NICs) உட்பட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 23-ஆம் தேதி, துறையின் கணினி அமைப்பில் திடீரென ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. தொழில்நுட்பச் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, 24-ஆம் தேதி காலை 11.00 மணி முதல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், சில நாட்களுக்குள் கணினி அமைப்பு மீண்டும் செயலிழந்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்…

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

தி.மு.க 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி: ஸ்டாலின்

“2026 சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது. திமுக கூட்டணியில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானது.

மாகாண சபை தேர்தல் நடக்கும்

சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து, யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி கூடி ஆராய்ந்துள்ளது.