18 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் கடும் மழை காரணமாக, 12 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 06 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் ‘நினைவாயுதம்’ கண்காட்சி

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘நினைவாயுதம்’ என்ற தலைப்பிலான ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்

சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) காலமானார்.  

எபோலா எச்சரிக்கை: அவசரநிலை பிரகடனம்

காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இதனை “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை” (PHEIC) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம்(2026.05.15) விடுமுறை வழங்கப்படுகின்றது. மேலும், நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அறியத் தருகின்றேன். ஆ.சுமதி வலய கல்வி பணிப்பாளர் (கடமை நிறைவேற்றல்) வலய கல்வி பணிமனை, ஹட்டன்.

கிளிநொச்சியில் 2 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீட மாணவர்களின் விடுதி வளாகத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 2026 மே 11 அன்று திறந்து வைக்கப்பட்டன.

நீடிக்கும் குறைந்த அழுத்தப் பிரதேசம் : கன மழைக்கு வாய்ப்பு

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாகவும், இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடும் என  எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்கிறது

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மவுசாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.

வாகனங்களின் விலை 10 சதவீதத்தால் அதிகரிப்பு?

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது

சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வர முயன்ற சீன நாட்டுப் பெண் ஒருவர், இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.