கடவுச்சீட்டு கணினி அமைப்பு வழமைக்குத் திரும்பியது

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கல் வியாழக்கிழமை (12) பிற்பகல் மீண்டும் தொடங்கியதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.