‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் நேற்று(05) நடத்தப்பட்ட “ஜன மஹிமய” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டினால் அவருக்கு சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

(“‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’” தொடர்ந்து வாசிக்க…)

The ‘CRISIS’ In Sri Lanka – Invented by the Western Media!

(BY Ambassador DrPalithaKohona)

Former Permanent Representative of Sri Lanka to the United Nations.

The change of Government in Sri Lanka, following the unceremonious sacking of Prime Minister Ranil Wickremesinghe by President Maithripala Sirisena, has given rise to a crescendo of alarmist commentary in the Western media, which is slowly seeping in to the non-Western media as well. One after the other, the Western media outlets have taken a critical approach to the change and have begun to characterize the replacement of the Prime Minister as a “Crisis”. Suave, comfortable in a European life style, fluent in the only European language he knows, English, neo liberal in thinking, and from an elite background, the former Prime Minister is fondly addressed as “Ranil” by the European diplomats and the dominant Western media representatives. He moves in Western circles with ease and is the darling of the mainly Western funded NGOs. Ranil enjoys an easy relationship with the Occident, having cultivated individuals and institutions there over the years. (“The ‘CRISIS’ In Sri Lanka – Invented by the Western Media!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 15)

(Thiruchchelvam Kathiravelippillai)
தமிழ் பேசும் மக்களிடையேயான விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருந்த எண்பதுகளில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் அவர்களிடையேயான உறவுகள் கட்டியெழுப்பப்படுவதன் அவசியத்தினை வலியுறுத்தி தீவிரமான பரப்புரைகளில் ஈழப் புரட்சி அமைப்பு(ஈரோஸ்) ஈடுபட்டது. தமிழ் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமிய மக்களுடன் அதிகளவான நெருங்கிய தொடர்பினைப் பேணியதும் அதிகளவான இஸ்லாமிய உறுப்பினர்களைக் கொண்டதுமான அமைப்பு ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஆகும்.
“மதத்தால் இந்துவானாலும் மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும் தீரச்சைவன் என்றாலும் ஈழத்தமிழர் ஈழவரே அவர் எங்கிருந்தாலும் நம்மவரே ” என்ற ஈரோசின் கருத்துக்கள் தமிழ் பேசும் புரட்சிகர சிந்தனையுள்ளவர்களால் ஈர்க்கப்பட்டது. இக்கருத்துகளின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் ஈரோஸ் அமைப்புடன் அதிகளவில் இணைந்தார்கள்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 15)” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த – மைத்ரிகூட்டணியைகவிழ்க்கஅமெரிக்காசதி: மஹிந்தவைஎச்சரிக்கும்ரஷ்யாவிற்கானதூதுவர்

சிறிலங்காவின்புதியபிரதமராகபதவியேற்றுள்ளமஹிந்தராஜபக்சவைஆட்சியில்இருந்துஅகற்றுவதற்காகஅமெரிக்காதனதுகொழும்பிலுள்ளதூதரகத்தின்ஊடாகபலதிட்டங்களைமுன்னெடுத்திருப்பதாகசிறிலங்காவின்ரஷ்யாவிற்கானதூதுவரானமஹிந்தவின்நெருங்கியசகாவானதயான்ஜயதிலக்கபுதியதகவலொன்றைமுன்வைத்திருக்கின்றார்.
ரணில்விக்கிரமசிங்கவைஆட்சியில்வைத்திருப்பதற்காகஅமெரிக்காமுன்னெடுத்துள்ளஇந்தசதியைமுறியடித்துஆட்சிஅதிகாரத்தைஆக்கிரமிப்புப்பாணியில்எவ்வாறுதொடர்ந்தும்தக்கவைத்துக்கொள்வதுஎன்பதுதொடர்பிலானயோசனைகள்அடங்கியதிட்டமொன்றையும்தயான்ஜயதிலக்கரஷ்யத்தலைநகர்மொஸ்கோவில்இருந்துமஹிந்தராஜபக்சவிற்குமின்அஞ்சல்மூலம்தெரிவித்திருக்கின்றார். (“மஹிந்த – மைத்ரிகூட்டணியைகவிழ்க்கஅமெரிக்காசதி: மஹிந்தவைஎச்சரிக்கும்ரஷ்யாவிற்கானதூதுவர்” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை செய்

அரசியல் கைதிகளை முடிந்தால் இன்றைக்கே விடுதலை செய்யட்டும். தாம் அவர்களுக்கு ஆதரவளிப்பது பற்றிப் பரிசீலிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  (“விடுதலை செய்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்., முல்லைத்தீவு, கிளிநொச்சியில் 690 பேருக்கு இழப்பீட்டு கொடுப்பனவு

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாகப் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த மக்களுக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சின் கீழியங்கும் புனர்வாழ்வு அதிகாரசபைக்கே அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். (“யாழ்., முல்லைத்தீவு, கிளிநொச்சியில் 690 பேருக்கு இழப்பீட்டு கொடுப்பனவு” தொடர்ந்து வாசிக்க…)

7 உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணத்தில், சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவ்வுணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. (“7 உணவகங்களுக்கு சீல்” தொடர்ந்து வாசிக்க…)

பாகிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளின் போராட்டங்கள் தொடர்கின்றன

பாகிஸ்தானில், மதநிந்தனைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்த கிறிஸ்தவப் பெண்ணை விடுதலை செய்வதற்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் (01), போராட்டங்கள் தொடர்ந்தன. கடும்போக்கு இஸ்லாமியவாதிகள், வீதிகளை மறித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர். (“பாகிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளின் போராட்டங்கள் தொடர்கின்றன” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளியன்று பதவியேற்ற வியாழனால் கூட்டமைப்புக்கு பிடித்திருக்கும் சனி!

தற்போதைய அரசியல் சூறாவளியை தனது மெகா துரோகத்தின் மூலம் தொடக்கிவைத்த மைத்திரியின் வழியில் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி மட்ட துரோகங்களும் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன. இப்படியான சூழ்நிலைகளில் வழக்கமாக முஸ்லிம் தரப்பிலிருந்துதான் கட்சித்தாவல்கள் இடம்பெறும். “தொப்பி பிரட்டி விட்டார்கள்”, “விலைபோய்விட்டார்கள்” என்று ஆங்காங்கே வசைபாடல்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பிக்கும். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நூல் கட்டிவிட்டதுபோல “முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ரணிலின் பக்கம்தான்” என்று ஒரேபிடியாக இருந்துகொண்டிருக்க, தமிழ்த்தரப்பிலிருந்து ‘முதலாவது வீரர்’ தனது சாகசத்தை காண்பித்திருக்கிறார். (“வெள்ளியன்று பதவியேற்ற வியாழனால் கூட்டமைப்புக்கு பிடித்திருக்கும் சனி!” தொடர்ந்து வாசிக்க…)

“தற்போதைய சூழலில் நாங்கள் இந்தியாவைக் கேட்டே முடிவுகளை எடுப்போம்” என்று சொல்லியிருக்கிறார் மாவை” என்றழைக்கப்படும் சேனாதிராஜா.

ஒரு மூத்த அரசியல்வாதி, தமிழரசுக் கட்சியின் தலைவர், நீண்டகாலமாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இவ்வாறு சொல்வதென்றால் அதை விடக் கேவலம் வேறில்லை. இந்திய மத்திய அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட தமிழ்நாட்டில் கூட இப்படிச் சொல்ல மாட்டார்கள். ஏன் அங்கே எந்த மாநில அரசுகள் கூட இவ்வாறு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கே மக்களும் எதிர்த்தரப்புகளும் ஊடகத்தினரும் கேள்வி மேல் கேள்வி எழுப்பித் தொலைத்து விடுவார்கள்.

(““தற்போதைய சூழலில் நாங்கள் இந்தியாவைக் கேட்டே முடிவுகளை எடுப்போம்” என்று சொல்லியிருக்கிறார் மாவை” என்றழைக்கப்படும் சேனாதிராஜா.” தொடர்ந்து வாசிக்க…)