மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்தமையானது, அரசமைப்புப் பிரகாரம் இடம்பெற்றுள்ளது என்பதை, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Author: ஆசிரியர்
மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்
(புருஜோத்தமன் தங்கமயில்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
(“மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)
ட்ரம்ப்பை எதிர்க்கிறார் இம்ரான் கான்
பாகிஸ்தான் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதன்மூலம், ஒரு காலத்தில் மிக நெருங்கிய தோழமை நாடுகளாக இருந்த இவ்விரு நாடுகளும், தமக்கிடையிலான முரண்பாடுகள் மூலம், அதிக இடைவெளியே ஏற்படுத்திய வண்ணமுள்ளன.
தமிழ்த்தேசியத் தலைமைக்கு
(நடேசன்)
ரோம இராச்சியம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்பார்கள். TAMIL SINHAL POLITICSஅதேபோல் ஜனநாயக அரசியலில் சிறிய விடயங்களும் பல காலம் விவாதிக்கப்படும். சில செய்து முடிக்கப்படும். பல செய்வதற்கு மேலும் காலமெடுக்கும். இது ஜனநாயகத்தின் முக்கிய பலம். அதே நேரத்தில் பலவீனமும் கூட . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது.
தமது தரப்பினரைக் கடுமையாக எச்சரித்தார் மஹிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் குறித்த உறுப்பினர்கள் நடந்துக்கொள்ளும் விதம் குறித்தே மஹிந்த எச்சரித்துள்ளார்.
(“தமது தரப்பினரைக் கடுமையாக எச்சரித்தார் மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)
சி.வியின் கோரிக்கை நிராகரிப்பு
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்துவந்த கோரிக்கையை, கனேடிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.
‘2.0’ வேண்டாம்; விஜய் படம்தான் வேண்டும்: கேரள பழங்குடி குழந்தைகளுடன் ‘சர்கார்’ படம் பார்த்த வயநாடு துணை கலெக்டரின் நெகிழ்ச்சிப் பதிவு
கேரளாவில் வயநாடு மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருப்பவர் உமேஷ் கேசவன். இவர் தனது முகநூல் பக்கத்தில் மனந்தாவாடியில் உள்ள பழங்குடி குழந்தைகளுடன் ‘சர்கார்’ திரைப்படத்துக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
மைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்
(முகம்மது தம்பி மரைக்கார்)
கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற, மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை, நாடாளுமன்றில் ரணில் தரப்பு நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், ‘அதுதான் இது’ என்கிற மாதிரி – பதில் வந்து கொண்டிருக்கிறது.
(“மைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 17)
(Thiruchchelvam Kathiravelippillai)
தம்பலகமத்திலிருந்து மக்கள் அச்சம் காரணமாக கிண்ணியாவிற்கு இடம்பெயர்ந்த போது அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று தமது ஆதரவை முஸ்லிம் மக்கள் வழங்கினர்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிண்ணியாவில் சுரங்கல், கச்சக்கொடித்தீவு, அரைஏக்கர், காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, முனைச்சேனை ஆகிய ஊர்களில் அதிகளவிலும் மஹாமம்மாதிரிக்கிராமம், சின்னக்கிண்ணியா, பெரிய கிண்ணியா போன்ற ஊர்களிலும் அடைக்கலம் புகுந்தார்கள். இதற்கான காரணம் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே அக்காலத்தில் மிக நெருங்கிய தொடர்புகள் , உறவுகள் இருந்தமையாகும்.
(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 17)” தொடர்ந்து வாசிக்க…)
மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?
(ஜெரா)
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை – நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது?