(By Arun Sitharth Maithreyan, சமூக நீதிக்கான இளைஞர் இயக்கம், யாழ்ப்பாணம்)
யாழ் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் சிவபாதசுந்தரம் பிரணவன் (46 வயது) சற்று முன் 4.30 pm மணியளவில் யாழ்ப்பாணப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். எமது அமைப்பான யாழ்/சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பாளரான ரஜிவரன் சோபிதன் (19 வயது D/B 10-06-1999) என்னும் இளைஞனை கடத்தியமை, சித்திரவதை புரிந்தமை, மற்றும் சோபிதனின் உடைமையில் இருந்த ரூபாய் 28,000 பெறுமதியான Huwavi Y-7 வர்க்க போனை பலாத்காரமாகத் திருடிச் சென்ற குற்றங்களுக்காகவே இவர் கைது செய்யப்பட்டார். இவர் நாளை யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என யாழ் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிகத் தகவல்கள் தேவையான ஊடக நண்பர்கள் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளவும்.