இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிசார் பயன்கள் /படிகள்

  1. பின்வரும் படிகள் 2017.01.01 இலிருந்து வலுவிற்கு வரும் வகையில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

படிகள் அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுப் படி ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=. குழுப் படி        அமர்வு இல்லாத தினங்களில் குழு நடைபெறும்போது ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=. (அமர்வு தினங்களில் நடைபெறும் குழுக்கூட்டத்திற்கு சமுகமளிப்பதற்கு படியெதுவும் செலுத்தப்படுவதில்லை.)

(“இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிசார் பயன்கள் /படிகள்” தொடர்ந்து வாசிக்க…)

கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம். ஜனவரி 5இல் பொதுத் தேர்தல்?

நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாகவும், அரச அச்சுத் திணைக்களத்துக்கு வர்த்தமானி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படும் நிலையில், எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதியன்று, பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.அமெரிக்காவில் பெண்களின் அலை

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும், #MeToo இயக்கம் மூலமாக, பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலிலும், அக்குரல்கள் ஓங்கி ஒலித்திருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் தெரிவாகியிருக்கின்றனர். இது, அந்நாட்டு வரலாற்றில், முதன்முறையாக நடந்துள்ளது. தற்போதைய பிரதிநிதிகள் சபையில், 84 பெண்கள் தான் காணப்படுகின்றனர்.

(“ஐ.அமெரிக்காவில் பெண்களின் அலை” தொடர்ந்து வாசிக்க…)

‘ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உரிய பதிலில்லை’

தற்போது சிக்கலாகியுள்ள பிரதமர் பதவி குறித்து ரணில் விக்கிரமசிங்க உயர்நீதிமன்றத்துக்கு செல்லாதது ஏன் என்பது தொடர்பில் இதுவரை ​ஐக்கிய தேசியக் கட்சியினர் எவ்வித பதிலையும் வழங்கவில்லையென்று ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டி.யு. குணசேகர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு, பிரதமராக ரணிலை சட்டவிரோதமாக நியமித்ததைப் போன்றே, இம்முறையும் பிரதமர் ஒருவரை சட்டவிரோதமாக நியமித்துள்ளாரென, ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டி.யு. குணசேகர தெரிவித்துள்ளார். அன்று விவசாயியின் மகனான ஜயரத்னவை பிரதமர் சட்டவிரோதமாக பதவி விலக்கும் போது, அமைதியாக இருந்தவர்கள் இன்று அதேப்போன்று ரணிலை பதவி நீக்கவும் பாரிய எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்

(கே. சஞ்சயன்)

இலங்கையின் அரசியலில் ஜனாதிபதி ஏற்படுத்திய குழப்பம், தெற்கு அரசியல்வாதிகளை மாத்திரமன்றித் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் குழப்பி விட்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்ற விடயத்தில், அறிவுரை சொல்வதாக நினைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் முன்வைத்த கருத்துகள், நடைமுறைக்கு ஒத்துவராதவை.

(“கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

‘நான் விலகுகின்றேன்’ மாவைக்கு சி.வி கடிதம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து தான் விலகுவதாக, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். தாம் விலகுவதாக விக்கினேஸ்வரன் கட்சிக்கு அறிவித்துள்ள நிலையிலும் புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதாலும் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாகவே கருதப்படுவார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

(“‘நான் விலகுகின்றேன்’ மாவைக்கு சி.வி கடிதம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியின் அழைப்பை: தமிழ் முற்போக்குக் கூட்டணி நிராகரித்து

புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, அரசமைப்புக்கு விரோதமான செயற்பாட்டுக்குத் தம்மால் ஆதரவளிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில், கொழும்பு-07லுள்ள, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதியை நேற்று (07) சந்தித்தது.

(“ஜனாதிபதியின் அழைப்பை: தமிழ் முற்போக்குக் கூட்டணி நிராகரித்து” தொடர்ந்து வாசிக்க…)

த.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்?

(அதிரன்)

வருடத்தின் இறுதிக்காலம் நமது நாட்டில் அனர்த்தகாலம். இந்தக்காலத்தில் மழை, வெள்ளம், கடும் காற்று, சூறாவளி எல்லாம் ஏற்படுவது வழமையே. அது போலவே, இந்த வருடத்தின் இறுதிக் காலம் அரசியலிலும் நடக்கிறது. இதைப் பலர் ‘அரசியல்புரட்சி’ என்றும் சொல்கிறார்கள்.

(“த.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்?” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part12)

ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது. இந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part12)” தொடர்ந்து வாசிக்க…)

‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் நேற்று(05) நடத்தப்பட்ட “ஜன மஹிமய” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டினால் அவருக்கு சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

(“‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’” தொடர்ந்து வாசிக்க…)