யாழ்பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் #கைது

(By Arun Sitharth Maithreyan, சமூக நீதிக்கான இளைஞர் இயக்கம், யாழ்ப்பாணம்)

யாழ் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் சிவபாதசுந்தரம் பிரணவன் (46 வயது) சற்று முன் 4.30 pm மணியளவில் யாழ்ப்பாணப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். எமது அமைப்பான யாழ்/சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பாளரான ரஜிவரன் சோபிதன் (19 வயது D/B 10-06-1999) என்னும் இளைஞனை கடத்தியமை, சித்திரவதை புரிந்தமை, மற்றும் சோபிதனின் உடைமையில் இருந்த ரூபாய் 28,000 பெறுமதியான Huwavi Y-7 வர்க்க போனை பலாத்காரமாகத் திருடிச் சென்ற குற்றங்களுக்காகவே இவர் கைது செய்யப்பட்டார். இவர் நாளை யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என யாழ் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிகத் தகவல்கள் தேவையான ஊடக நண்பர்கள் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

(“யாழ்பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் #கைது” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப் போராட்ட இயக்கங்களது ஐந்தொகையைச் சிறு குறிப்பாக…

தமிழ்பேசும் மக்கள் தங்கள்மீதான இலங்கை அரசின் இனவொடுக்குமுறைக்கு -இனப்படுகொலைக்கு எதிராகப் போராடத் தம் புதல்வர்களை அனுப்பியதும் , தாம் சேர்ந்து தோள் கொடுத்ததும் இதுவரையான வரலாறுதாம் .இயக்கங்கங்கள் தமது இயக்க இருப்புக்காகக் கட்டாயப்படுத்தி இளைஞர்களைச் சிறார்களை யுத்தக் களத்துக்கு அனுப்பிப் பல்லாயிரக் கணக்காய்ப் பலியெடுத்ததும் ஈன வரலாறுதாம். (“ஈழப் போராட்ட இயக்கங்களது ஐந்தொகையைச் சிறு குறிப்பாக…” தொடர்ந்து வாசிக்க…)

முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பேட்டி

கே. ஒக்ேடாபர் 26ஆம் திகதி முக்கிய தீர்மானத்தை மேற்கொண்ட போது நிலைமை இந்தளவு சிக்கலாகும் என்று எப்போதா வது நினைத்தீர்களா?

ப. இல்லை. ஒருபோதும் இல்லை. அப்படி சிந்திப்பதற்கான எந்தக் காரணமும் இருக்கவில்லை. மக்கள் அதற்கான பொறுப்பினை ஏற்றுச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்ைகயில்தான் அந்த முடிவை எடுத்தேன். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே எனது முடிவு அமைந்திருந்தது.

(“முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பேட்டி” தொடர்ந்து வாசிக்க…)

இரணைமடு

பயன்பாட்டு எல்லை மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்

இரணைமடுவை அண்டிய கிராமங்கள் தண்ணீரின்றி தவிக்க, நன்நீர் மீனவர்கள் தாம் கவனிக்கப்படுவதில்லை எனக் கருதுகின்றனர். ‘இரணைமடு விவசாயிகள் நெற்செய்கைக்கு அப்பால் பயறு, கௌபி, உளுந்து, சோளம், நிலக்கடலை போன்ற உப உணவு பயிர்ச்செய்கையில் ஆர்வமின்றி காணப்படுகின்றனர். இந் நீர்த்தேக்கத்தால் ஏழு ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவதாக கூறப்பட்டாலும் சில நூறு விவசாயில்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களாக விளங்குகின்றனர்.’

(“இரணைமடு” தொடர்ந்து வாசிக்க…)

மேற்குலகுக்கு ‘ஜனநாயகம்’ சொற்பதம் மட்டுமே

மேற்குலகும் அதன் உள்ளூர் ஆதரவாளர்களும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு ‘ஜனநாயகம்’ என்ற சொற்பதத்தை ஒரு சாக்காக பயன்படுத்துகின்றன என்று ஐக்கிய நாடுகளின் அமைப்பில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகம் தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கூறினார்.

(“மேற்குலகுக்கு ‘ஜனநாயகம்’ சொற்பதம் மட்டுமே” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் வடக்கு முதலமைச்சரை எப்போதோ நிராகரித்து விட்டேன் அவருடன் கூட்டுச் சேரும் நோக்கம் எப்போதும் இல்லை

முன்னாள் வடமாகாண முதலமைச்சரை நான் எப்போதோ நிராகரித்து விட்டேன். அவருடன் கூட்டுச் சேரும் நோக்கம் எப்போதும் இல்லை என மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து சமய காலாச்சாரம் மற்றும் வடக்கின் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்ற முன்னாள் முதலமைச்சர், ஈபிடிபியை இணைத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளாரே என ஊடகவியலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“முன்னாள் வடக்கு முதலமைச்சரை எப்போதோ நிராகரித்து விட்டேன் அவருடன் கூட்டுச் சேரும் நோக்கம் எப்போதும் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய வாகன இறக்குமதியாளர்கள் பாதிப்பு

வாகன இறக்குமதியை கட்டுப்படுத்தி, அதனூடாக இலங்கை ரூபாயின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையாமல் பேணுவது தொடர்பாக, இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(“இந்திய வாகன இறக்குமதியாளர்கள் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.ஜி.பி தலைமையிலான குழு வவுணதீவுக்கு விரைந்தது

பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித ஜயசுந்தர தலைமையிலான குழுவொன்று மட்டக்களப்பு வவுணதீவுக்கு விரைந்துள்ளது என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆகியோரே, அந்த குழுவில் அங்கம் வகித்துள்ளனர். (“ஐ.ஜி.பி தலைமையிலான குழு வவுணதீவுக்கு விரைந்தது” தொடர்ந்து வாசிக்க…)

“புலி” என்ற சொல் மட்டுமே அரசியல் பிழைப்புக்காகத் தேவைப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு புலம்பெயர் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் உதவி செய்து வரும் மாற்றுவலுவாளரைச் சந்தித்துப் பேசச் சென்றோம். நாங்க்ள் சந்தித்த அந்த மாற்றுத்திறனாளி, தன்னுடைய பிரச்சினைகளையும் துயரங்களையும் விட, தன்னைப்போலச் சிரமங்களின் (பாடுகளின்) மத்தியிலிருப்போரைப் பற்றியே பேசினார். (““புலி” என்ற சொல் மட்டுமே அரசியல் பிழைப்புக்காகத் தேவைப்படுகிறது.” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்

கடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் அரசியல் நிலவரம் மீண்டும் ஒரு பேசுபொருளாகிவிட்டது. இதன் அர்த்தம் இலங்கை ஏதோ அமைதியான சுபீட்சம் நிறைந்த நாடாக இருந்தது. ஆனால் சடுதியாக நிகழ்ந்த அரசியல் சூறாவளியால் எல்லாம் தலைகீழாகி விட்டது என்றாகிவிடாது. இலங்கையைக் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற சூழ்ச்சித்திட்டங்கள் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றன என்பதையே இன்றைய நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. (“இலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்” தொடர்ந்து வாசிக்க…)