(Saakaran)
மரண வீடு ஒன்றிற்கு சகா ஒருவருடன் இணைந்து செல்லும் வாய்பை ஏற்படுத்திக் கொண்டேன். பொது வாழ்வில் இணைந்து 40 வருடத்திற்கு மேற்பட்ட பயணத்தில் ஒரே குறிக்கோளுக்காக ஒரே பாதையில் பயணித்த போது கந்தையா நாகம்மா வீட்டிற்கு பல தடவை 1980 களின் முற் கூற்றில் சென்று வந்த நினைவுகளுடன் தனது 98 வயதில் இயற்கை எய்திய அந்த தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வாய்பை இழந்திருந்தாலும் அதற்கு மறு தினம் அவரின் இரு புதல்வர்களை சந்தித்து எமது அம்மாவின் இழப்பிற்கான எனது வருந்தலை தெரிவிக்க கட்டைப்பிராயில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன்னாள் மாகாணசபை அமைச்சர் என்ற இருவரையும் சந்தித்த வாய்பு 28 வருடங்களின் பின்பு ஏற்பட்டது.