விவாதம்

(Karunakaran Sivarasa)
சிவசக்தி ஆனந்தனுக்கு மட்டுமல்ல கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்களுக்கும் உண்மை நிலைமை புரியும். கூட்டமைப்பின் தலைமையைப் பற்றி – சம்மந்தனின் தலைமைத்துவத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றி எல்லாம் எல்லோரும் அறிவர்.

(“விவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டை

தூத்துக்குடி மாவட்ட மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு -1 மார்ச்சு 31, 2018க்குப் பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அந்தக் குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் ஏப்ரல் 9, 2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது. இந்த முடிவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் கூறியுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. (“தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டை” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் போராட்டங்களை

(நடிகர் சூர்யா கட்டுரையிலிருந்து)

மக்கள் போராட்டங்களை  ‘பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை மூடச்சொல்வது நியாயமில்லை; திட்டங்களை நிறுத்தச் சொல்வது சரியில்லை’ என்று கொச்சைப்படுத்துபவர்கள், பல ஆயிரம் மக்கள்
புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால்
பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்?

(“மக்கள் போராட்டங்களை” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடி போராட்டம் இப்படியொரு கொதிநிலையை அடையும்

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தமிழர்களுக்காக பெரும் எண்ணிக்கையில் தீயில் வெந்து இறந்த பின்னர், தமிழக மக்கள் மீண்டுமொருமுறை அதிகாரத்துக்கு எதிரான தமது போர்க்குணத்தை காண்பித்திருக்கிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு எதிரான தங்களது ஓர்மம் சமரசம் செய்ய முடியாதது என்பதை மீண்டுமொரு தடவை களத்தில் வந்து நின்று நிரூபித்திருக்கிறார்கள்.

(“தூத்துக்குடி போராட்டம் இப்படியொரு கொதிநிலையை அடையும்” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடி படுகொலை

அதிகார வர்க்கம் எப்போதும் ஒரே குணம் கொண்டது.அது அதிகாரத்தை தக்கவைக்க எதையும் செய்யும்.அவர்களுக்குஇனம்,மதம்,சாதி எதுவுமே கிடையாது.இவர்களிடையே மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

(“தூத்துக்குடி படுகொலை” தொடர்ந்து வாசிக்க…)

எம்ஜிஆர் காலத்திலும் இதே கொலைகள் நடைந்தேறியே இருக்கின்றது

“தொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பாசிச பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது.

(“எம்ஜிஆர் காலத்திலும் இதே கொலைகள் நடைந்தேறியே இருக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

“வெறுங்கையுடன் நிற்கிறேன்”

(Karunakaran Sivarasa)

“அளவெட்டி மல்லாகம் ப.நோ.கூ. சங்கத்தின்ர தலைவராக இருந்த ஜெகநாதனும் மகனும் கரண்ட் அடிச்சு பலியாகீட்டினம. இண்டைக்குக் காலமைதான் சம்பவம் நடந்திருக்கு” என்று சொல்லி, அந்தச் செய்தியை வாசித்தார் கே.கே என்று நான் எப்போதும் அன்பாக அழைக்கும் ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் .கிருஸ்ணகுமாரின் குரல் தளம்பியது. அது ஒரு சகோதரனின் இழப்பினால் உண்டான சோகத்தின் தவிப்பு. தத்தளிப்பு.

(““வெறுங்கையுடன் நிற்கிறேன்”” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடியிற்கான அறுவடைக்கு சொல்லும் சேதி……?

வறுமையும் பஞ்சமும்
தலைவிரித்தாடிய ரஷ்யா.

1905. ஜனவரி 9.
ஞாயிற்றுக்கிழமை.

“ஜார் மன்னருக்கு நடப்பது எதுவும் தெரியாது.
அவரிடம் முறையிடுவோம் வாருங்கள்”
என்று…
மக்களை – தொழிலாளர்களைத் திரட்டினார்
கப்பான் என்கிற கிருஸ்துவ பாதிரியார்.

(“தூத்துக்குடியிற்கான அறுவடைக்கு சொல்லும் சேதி……?” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டெர்லைட் போராட்டம்: கள நிலவரம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று (22.05.2018) நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்க டில் 9 பேர் உயி ரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தூத்துக்குடி நகரமே கலவர காடாக மாறியது. பதற்றம் நீடிப்பதால் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

(“ஸ்டெர்லைட் போராட்டம்: கள நிலவரம்” தொடர்ந்து வாசிக்க…)