- இலங்கை உட்பட 13 நாடுகள் இணை அனுசரணை
- 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா வலியுறுத்தல்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு இலங்கை உட்பட 13 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன. இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்கப் படுத்தும் நோக்கில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையொன்றை முன்வைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தது. இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட நகல் வரைபு உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களில் விவாதிக்கப்பட்டு மாற்றங்களுடன் கடந்த 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நகல் பிரேரணைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, வடஅயர்லாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.
(“வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)