ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் அலிரேசா டங்சிரி! ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

போருக்கு நடுவே தைரியமாக முடிவு எடுத்த ஜப்பான்

மத்திய கிழக்கு மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் விலையுயர்வைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் ஜப்பான் அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இலங்கை – ரஷ்யாவிற்க்கிடையில் எரிசக்தி ஒத்துழைப்பு

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான எரிசக்தித் துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது அனைத்து வகையான இரத்த பிரிவுகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் ID சேவை இடைநிறுத்தம்

ஆட்கள் பதிவுத் துறையின் கணினி அமைப்பு இன்று (26) மீண்டும் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அத்தியாவசிய பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணினி அமைப்புச் செயலிழப்பு காரணமாக, ஒரு நாள் மட்டும் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் (NICs) உட்பட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 23-ஆம் தேதி, துறையின் கணினி அமைப்பில் திடீரென ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. தொழில்நுட்பச் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, 24-ஆம் தேதி காலை 11.00 மணி முதல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், சில நாட்களுக்குள் கணினி அமைப்பு மீண்டும் செயலிழந்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்…

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

தி.மு.க 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி: ஸ்டாலின்

“2026 சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது. திமுக கூட்டணியில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானது.

இணையவழி நிதி மோசடி : சீனா ,வியட்நாம் பிரஜைகள் கைது

இணையத்தளம் ஊடாக பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சீன மற்றும் வியட்நாம் பிரஜைகள் குழுவொன்று, காலி – போத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் வரை கடும் வெப்பநிலை நீடிக்கும்

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வெப்பநிலையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குவைட் சர்வதேச விமான நிலையம் பற்றி எரிகிறது

குவைட் சர்வதேச விமான நிலையம் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இன்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தெரிவித்தார். குவைட் சர்வதேச விமான நிலயைத்தில் பரவியுள்ள தீ இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை எனவும் அவர் எமக்கு தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி கடந்த 23 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு அமுலாகும் வகையில் யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.