மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில்….?

மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சரமான விஜயகலா மகேஸ்வரனுக்குள்ள தொடர்பு
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ள மத்திய, ஊவா மாகாணங்களுக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் வங்கிக்கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா ரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசந்த சில்வா ஊர்காவற்றுறை பிரதான நீதிவான் மொஹம்மட் ரியாழிடம் நேற்று பெற்றுக்கொண்டுள்ளார்.

(“மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில்….?” தொடர்ந்து வாசிக்க…)

திரு பிரபா சுகிர்தரன் ரட்ணசபாபதி

அன்னை மடியில் : 15 சனவரி 1972 — ஆண்டவன் அடியில் : 20 யூலை 2017
லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரபா சுகிர்தரன் ரட்ணசபாபதி அவர்கள் 20-07-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஜோதி, லோகேஸ்வரி தம்பதிகளின் முதற் பேரனும்,

காலஞ்சென்ற இளையதம்பி ரட்ணசபாபதி (ஈழப்புரட்சி அமைப்பு – EROS), தில்லை மாலினிதேவி(மாலினி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ரேஹான், பிருந்தன், ஆயிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திங்கட்கிழமை 24/07/2017, 03:20 பி.ப — 04:00 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK

பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956160779

தகவல்
குடும்பத்தினர்

திரு முத்துலிங்கம் சந்திரசேகரம்பிள்ளை

திரு முத்துலிங்கம் சந்திரசேகரம்பிள்ளை

கல்முனையை  பிறப்பிடமாகவும், கனடா மற்றும் களுவாஞ்சிக்குடியை   வதிவிடமாகவும் கொண்ட திரு முத்துலிங்கம் சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை பேச்சிபிள்ளை அம்மா தம்பதிகளின் மகனும், களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த அம்பிகா  அவர்களின் அன்புக் கணவரும், சுகுமாரி, சுகுமதி, சுயிவா அவர்களின் அன்புத் தந்தையுமாவார்.

திருமதி சிவமணி திலகரெத்தினம், மற்றும்  காலஞ்சென்றவர்களான திருமதி பொன்னம்மா நாகமணி,  திருமதி சரஸ்வதி பூபாலபிள்ளை,  திரு கிஸ்ணபிள்ளை சந்திரசேகரம்பிள்ளை  ஆகியோரின் சகோதரும், திரு சிவம் வினாயகமூர்த்தி, திரு சோமா ஞானபண்டிதன், திரு சுத்தானந்தம், திரு  பரமானந்தம் வல்லிபுரம் ஆகியோரின் அன்பு மாமனாரும், அவிநாஸ், அஸ்னா, கவித், அமிதா, சிவாணி, சாயிசிவா ஆகியோரின் பாசமிகு பாட்டனாருமாவார்.

அன்னார் மட்/ கல்லடி சிவாநந்த வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

தகவல்
குடும்பத்தினர்


அஞ்சலி நிகழ்வுகள்:
ஜுலை 05 புதன்கிழமை  மாலை  5:00 – 9:00

ஜுலை 06 வியாழக்கிழமை காலை  9:00 – 11:00

தகனக் கிரியை: ஜுலை 06 வியாழக்கிழமை காலை   11:30


முகவரி:    Glen Oaks Funeral Home, 3164 Ninth Line, Oakville, ON, L6H 7A8

 

தொடர்புகளுக்கு
பரமானந்தம் வல்லிபுரம் (மருமகன்) :  905 – 499 7941, அம்பிகா (மனைவி) : 289- 521 3686,

சுகுமாரி (மகள்) : 905– 285 0319, சுயிவா (மகள்): 416 – 895 1831, சுகுமதி (மகள்): 416 – 878 3504

லண்டனில் தியாகிகள் தினம்–2017

“பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யானது “பத்மநாபா மக்கள் முன்னணி” என்ற பெயருடன் ஒரு சமூக இயக்கமாகவும், “தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” (S.D.P.T). என்ற பெயருடன் ஒரு அரசியல் கட்சியாகவும் மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம், ஐக்கியம், தமிழ் சமூகத்தில் ஐனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றிற்காகப் போராடி மரணித்த தோழர்கள், போராளிகள், அரசியல்வாதிகள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களுக்கான இவர்களது 27வது வருட அஞ்சலி நிகழ்வு, வெளிநாட்டுப் பிராந்திய லண்டன் கிளையினரால் கடந்த 24 ஜூன் 2017ல் லண்டனில் நடாத்தப்பட்டது.

(“லண்டனில் தியாகிகள் தினம்–2017” தொடர்ந்து வாசிக்க…)

கொட்டியாரத்து பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம்

”இலங்கைத்தீவில் வாழும் பூர்வீக பழங்குடிகளான நாங்கள் இயக்கர் நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாக எம்மைக்கருதுகிறோம். எம்மில் ஒரு பிரிவினர் மகியங்கனையை அண்டிய பகுதிகளில் ஒரு பிரிவாகவும் நாம் வாகரை, வெருகல் மற்றும் மூதூரை அண்டியும் சுமார் 35 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியிலும் வாழ்ந்து வருகின்றோம். எமக்கான பூர்வீக மொழி ஒன்றை நாம் பேச்சு வழக்கில் கொண்டுள்ளோம். எம்மில் சிலர் இன்னும் அதனைப்பேசி வருகின்றனர். ஆனாலும் நாம் தமிழ் மொழியையே பேச்சு மொழியாகக் கொண்டுள்ளோம். இப்பிரதேசத்தின் மிக மூத்த குடிகளாக நாம் இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
(“கொட்டியாரத்து பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

நன்றி மறந்தோம் நாதியற்றவர் ஆனோம்!?

ஈழத் தமிழரை நாடு விட்டு ஓடவைத்தது மட்டுமல்ல, சொந்த நாட்டில் இருப்பவரை கூட நடுத்தெருவில் குந்தி இருந்து புலம்ப விட்ட நிலையை உருவாக்கிய படுகொலை நடந்த நாள் மே 21. இந்தியாவின் இளம் பிரதமர், பாரதத்தை கணணி யுகத்தில் முன்னிலை படுத்தியவர்,  எதிர்கால இந்திய வல்லரசின் அசுர வளர்ச்சிக்கு தன் சிந்தனை சிறகை விரித்தவர், சிறிபெரம்புதூர் மண்ணில் மிருக வெறியின் உச்சத்தால் உடல் சிதறுண்டு போனார்.

(“நன்றி மறந்தோம் நாதியற்றவர் ஆனோம்!?” தொடர்ந்து வாசிக்க…)

தொழிலாளர் தின நிகழ்வு

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு திருகோணமலையில் நடக்கயிருப்பதால் தொழிலாளர்கள், தோழர்கள் மற்றும் நண்பர்கள் இவ் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விவசாயிகளுக்கான முதல் போராட்டத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்த நாராயணசாமி நாயுடு

தங்களின் ஜீவாதார பிரச்சினை களுக்காக கடந்த 18 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் நடத்தும் நூதன போராட்டங்களால் தலைநகர் டெல்லியில் பதற்ற மான சூழ்நிலை உருவாகிக் கொண் டிருக்கிறது. இந்த வேளையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயி களுக்கான முதல் உரிமை போராட் டத்தை நடத்தியவர் கோவையை அடுத்த செங்காலிபாளையத்தைச் சேர்ந்த விவசாயத் தோழர் நாராய ணசாமி நாயுடு. அவரைப் பற்றி நினைவு கூர்கிறார்கள் அவரோடு போராட்டக் களங்களில் இருந்தவர் கள்.

(“விவசாயிகளுக்கான முதல் போராட்டத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்த நாராயணசாமி நாயுடு” தொடர்ந்து வாசிக்க…)