கந்தன் கருணைப் படுகொலைகள்

(சாகரன்)

30 விநாடிகளில் 60 இற்கும் மேற்பட்ட உயிர்க் கொலைகள். உலகின் பிரசித்தி பெற்ற ஆயுதம் SMG (ஏகே 47, (ஏனையவர்களின் தகவல் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளது) இனால் தொடர்ச்சியான குண்டுப் பாய்ச்சல்கள். தொடர்ந்தாற்போல் குற்றுயிராய் இருந்தவர்கள், தப்பி ஓடி மதகிற்குள் புகுந்து மறைந்தவர்களை குண்டு வீசி மரணத்தை உறுதி செய்த கொலைகள். எல்லாம் 30 நிடத்திற்குள் முடிக்கப்பட்டுவிட்டன. பிணக் குவியலுக்குள் பிணம் போல் இரத்த வெள்ளத்திற்குள் முழ்கி அசையாமல் இருந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பிய கோர நிகழ்வு. இவரின் வாக்கு மூலமும் அதனைத் தொடர்ந்த பதிவுகளும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் குறிப்பீடுகள் சம்பவத்தை உறுதி செய்திருக்கும் பதிவுகளும் நடைபெற்று 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. மனித உரிமை அமைப்புக்களோ ஐ.நா. சபையே ஏறெடுத்துப் பார்க்காத படுகொலைகள் இது. வெலிக்கடைப் சிறைப்படுகொலையை விஞ்சிய வீச்சுப் படுகொலை. கறுப்பு ஜுலையை பின்னுக்கு தள்ளிய மார்ச் 30 படுகொலை அது கந்தன் கருணைப் படுகொலை. எம்மவர்களால் எம்மவர்கள் மீது எமது மண்ணில் எமது சுற்றத்தவர் பார்த்திருக்க நடைபெற்ற கைதிகளின் படுகொலை இது.

(“கந்தன் கருணைப் படுகொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)

சந்திரிகாவின் தெல்லிப்பழை விஜயம்…

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன்று சனிக்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குபட்பட்ட வீமன்காமம் பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்பின்னர், வலிகாமம் வடக்கு மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்தினால் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

 

போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் உள்நாட்டு விசாரணையை முன்னெடுக்கவேண்டும்

(வரதராஜப்பெருமாள்)

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோருவதை காட்டிலும் உள்நாட்டு விசாரணைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று வடக்கு,கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  வரதராஜப்பெருமாள்வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு விசாரணை ஒன்றில் பின்பற்றப்படும் முறையே சர்வதேச விசாரணை ஒன்றிலும் பின்பற்றப்படுகிறது. எனவே உள்நாட்டு விசாரணைகள் தொடர்பாக ஆராயவேண்டும் என்றும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். முதலில் உள்நாட்டு விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சர்வதேச விசாரணை தொடர்பாக சிந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை என்றக்கோரிக்கையை முன்வைப்பது, விவேகமற்ற செயல் என்றும் வரதராஜப்பெருமாள் கூறியுள்ளார்.

நிரந்தரத் தீர்வை நோக்கி நகரட்டும் கடலோடிகளின் பிரச்சினை!

இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை. அவரது மரணத்துக்கு நீதி கேட்டு ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியின் பேரில் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கை, தமிழக அரசுகளின் சார்பில் சில தற்காலிக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தொடர்கதையாகி வரும் மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

(“நிரந்தரத் தீர்வை நோக்கி நகரட்டும் கடலோடிகளின் பிரச்சினை!” தொடர்ந்து வாசிக்க…)

மீட்கப்பட்ட புதுக்குறிச்சி ஏரி: இளைஞர்களின் முயற்சிக்கு இயற்கை அளித்த கொடை

(இந்தக் கட்டுரை எமக்கும் பொருந்துகின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான ஈழத்தின் தமிழ் பகுதிகளுக்கும்) எனவே இதனை பிரசுரம் செய்கின்றோம் – ஆர்)

(அ.சாதிக் பாட்சா)

புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.
புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் புதுக்குறிச்சியைச் சேர்ந்த நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து அங்கு உள்ள 110 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை சீரமைத்து வருவது குறித்து ‘தி இந்து’வில் ‘நீர்நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்’ எனும் தலைப்பில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அன்று செய்தி வெளியாகியிருந்தது.

(“மீட்கப்பட்ட புதுக்குறிச்சி ஏரி: இளைஞர்களின் முயற்சிக்கு இயற்கை அளித்த கொடை” தொடர்ந்து வாசிக்க…)

‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’

அடுத்த தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை அரசியல் நாற்காலியில் இருந்து கீழ் இறக்க செயற்படவுள்ளதாக கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்ப ட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். (“‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்மியோடு சிறியரை சரியாசனம் வைத்த ……நல்லிணக்கம்!!!

கோவிலில பரிவட்டம் கட்டுறதுக்கு ஆர்மியை கூப்பிட்ட அந்த கோயில் நிர்வாகம் திருந்தணும். இல்ல அவங்களுக்குத்தான் அறிவில்ல எண்டு பார்த்தால் , மேடைவழிய ,நேர்சரி விளையாட்டுப்போட்டிகூட மிச்சம்வைக்காமல் கிடைக்கிற மேடையெல்லாம் வாய்கிழிய தேசியம் கதைக்கிற ( கவனிக்க “கதைக்கிர ” மட்டும்) சிறியருக்காவது புத்திவேண்டாம்??
ஆர்மியை கூப்பிட விடாமல் செய்திருக்கணும், இல்ல ஆர்மிக்கு பரிவட்டம் கட்டினால் தான் வரமாட்டன் எண்டு சொல்லி வெளியில நிண்டிருக்கணும். அப்ப்டி வெளியில நிண்டிருந்தால் சனத்துக்கும் ஒரு பாடமாக அமைஞ்சிருக்கும். இனிமேல் இப்படி செய்யாமல் விட்டிருப்பினம். ஆனால் , முன்னுக்கு நிண்டு விலாசம் காட்டணும் எண்டு துடிக்கிற சிறியர் , தான் வெளியில போனால், இன்னொருத்தன் வந்திடுவான் எண்ட பயத்தில ஆர்மியெண்டால் என்ன் எண்டு எங்கட வன்னி மண்ணிலயே அவனோடு சேர்ந்து பரிவட்டம் கட்டி இனத்தை கேவலப்படுத்துறார்.
ஜமீன் டிசைன் அப்படி

மரண அறிவித்தல்

(முன்னாள் ஈபிஆர்எல்எவ், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கனடா பொறுப்பாளரும் இன்னாள் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி இன் ரொரன்ரோ பொறுப்பாளர் ஏ.கே.ஆனந்தன் அவர்களின் மனைவியின் தாயார் இவர்)

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நவரட்ணம் அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், புவனேஸ்வரி, கமலாவதி(இலங்கை), பஞ்சலிங்கம்(ஜெர்மனி), இராஜேஸ்வரி, சிவா, ஞானேஸ்வரி, லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, பாலசிங்கம், காலஞ்சென்ற யோகராசா, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கராசா, நகுலேஸ்வரி, குமரேசன், சிவபாக்கியலட்சுமி, வெற்றிவேல், சீலி, ஆனந்தன், சிவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாவதி — இலங்கை
தொலைபேசி: +94215101259
பஞ்சலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி: +49775602849
சிவா — கனடா
செல்லிடப்பேசி: +14166692687
லோகேஸ்வரி — கனடா
செல்லிடப்பேசி: +16478473635

கேப்பாபுலவு

கேப்பா புலவு பிலக் குடியிருப்பு மக்களின் சொந்த நிலமீட்புக்கான அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக மல்லாவி வர்த்தகர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை திங்கட்கிழமை நடாத்தி இருந்தது. இது உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு விடயம். இப்படியான ஆதரவை தெரிவிக்க ஏனைய நம்முடைய மக்கள் மறந்து விட்டார்களே என்பது தான் வேதனை. ஜல்லிக்கட்டுக்காக வீதியில் இறங்கிய மக்களுக்கு கேப்பாபுலவு மக்களின் கண்ணீர் தெரிய வில்லையே.
தங்களுடைய காணிகளை தருமாறு கேட்டு மக்கள் வீதிகளிலே கிடக்கிறார்கள்.

(“கேப்பாபுலவு” தொடர்ந்து வாசிக்க…)

சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்

இணைந்த வடகிழக்கு மாகாண அரசின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அவர்கள், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடன், வடகிழக்கு மாகாண அரசுக்காண அதிகாரங்களை பகிர்வது தொடர்பான ஒரு சந்திப்பில் கிளிக் செய்த புகைப்படம் ஒன்றையே நீங்கள் இங்கு காண்கிறீர்கள்.
வடகிழக்கு மாகாண அரசு அமைத்து மிகக் குறுகிய காலத்தில் பெரும் நெருக்கடிகளின் மத்தியிலும் பல சாதனைகளை புரிந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். ‘இது மாகாண சபை அல்ல மாகாண அரசு’ என இலங்கை அரசுடன் வாதிட்டவர். மாகாண அரசிற்கான அதிகாரங்களை கேட்டு இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்தவர். ‘எங்களோடு ஒத்துழைப்பீர்களானால் உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம்’ என்ற தொனியில் பேசி ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் விலைக்கு வாங்க முற்பட்ட வேளைகளில் எல்லாம் அதைத் புறக்கணித்து மாகாண அரசுக்குரிய அதிகாரங்களை பெறுவதிலேயே குறியாக இருந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். (“சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்” தொடர்ந்து வாசிக்க…)