கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய தலைவராக பேராசிரியர் KTM உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.பேராசிரியர் ஹேமபால எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றினார். அவர் ஒரு புகழ்பெற்ற கல்வியாளரும் என்பதுடன், முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் பேராசிரியர் மற்றும் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: Uncategorised
மாணவி பாலியல் துன்புறுத்தல்: ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை
பட்டதாரிகள் திருமலையில் ஆர்ப்பாட்டம்
யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லிம் பெண் பிரதிநிதி
நாமலின் அடுத்த வியூகம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, அழைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய தேர்தல்களில், தஹாம் சிறிசேன பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.
அதிக புகை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய CCTV கமராக்கள்
சிறுமி ஹம்சி
கொத்மலை பஸ் விபத்து: காரணம் அம்பலம்
கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள் வியாழக்கிழமை(15) அன்று, ஸ்தலத்தை பார்வையிட்டு விபத்துக்குள்ளான பேருந்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கினர்.
உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார்
உலகின் மிகவும் ஏழ்மையான ஜனாதிபதி என்று அறியப்பட்ட, லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா காலமானார். இறக்கும் போது அவருக்கு 89 வயதாகும்.

இடதுசாரி அரசியல்வாதியான முஜிகா, பல முற்போக்கான சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய ஒரு தலைவராக இருந்தார். அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் அறியப்படுகிறார்.
