இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குழந்தைகள், கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் இருந்து இதுவரை பதிவாகியுள்ளனர் என்று அந்த வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

வாய்ப்பு கேட்கத் தெரியலை… அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!” – பாடகி ஜென்ஸி

தமிழ் திரை இசையுலகில் மறக்க முடியாத பாடகி, ஜென்ஸி. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். தன் மென்மையான குரலால் நம் மனதை கொள்ளை கொண்டவர். பிரபலமாக இருந்த நேரத்தில் மியூசிக் டீச்சராக தன் வாழ்வை மாற்றிக்கொண்டவர்.”பிறந்து வளர்ந்தது, தற்போது வசிப்பது எல்லாமே கேரளாவுலதான்.

இலங்கை: கொரனா செய்திகள்

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும், நாளை (08) கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் வைத்தியஅதிகாரி வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மற்றொரு சர்வதேச பிரேரணை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் அரச தலைவர்கள், படை அதிகாரிகளைக் குறி வைத்து, ஒரு பிரேரணையை நிறைவேற்றி, மூன்று மாதங்கள் முடிவடையும் முன்னர், ஐரோப்பிய நாடாளுமன்றமும் இலங்கை அரசாங்கத்தைக் கதி கலங்கச் செய்யும் வகையில், பிரேரணை ஒன்றைக் கடந்த 10 ஆம் திகதி நிறைவேற்றியுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோஃபார்ம் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. 10 இலட்சம் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று(09) அதிகாலை 5.02 மணியளவில்  வந்தடைந்துள்ளது.

கொரனா: பெருவில் மோசமான உயிரிழப்பு வீதம்

பெருவானாது கொரோனாவால் உயிரிழந்த தமது உத்தியோகபூர்வ எண்ணிக்கையை 180,764ஆக நேற்று ஏறத்தாழ மூன்று மடங்காக்கியுள்ளது. அரசாங்க மீளாய்வொன்றைத் தொடர்ந்தே பெரு இவ்வாறு உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மாற்றியுள்ள நிலையில், உலகின் மோசமான இறப்பு வீதத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் ஆயிரத்து 434 ​பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 825ஆக அதிகரித்துள்ளது. 

நினைவேந்தலில் ஈடுபட்டஎண்மர் கைது

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் வைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்த 8 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், இன்று (18) கைதுசெய்து செய்யப்பட்டுள்ளனர் என கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.