வெனிசூலா தேர்தலில் சோசலிஸ்டுகள் அமோக வெற்றி!

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் 23 மாநிலங்களுக்கு நொவம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைiமையிலான ஆளும் ஐக்கிய சோசலிச கட்சி 20 மாகாணங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் தலைநகர் கரகாசும் அடங்கும். இருந்தும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மதுரோவின் வெற்றியை ஊழல் மோசடியால் பெறப்பட்டது என அமெரிக்கா சித்தரித்தது போல இந்த மாநிலத் தேர்தல்களையும் அமெரிக்கா அதனடிப்படையில் குறை கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்தக் குற்றசச்சாட்டு அடிப்படையற்ற, வெறும் காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட ஒன்று. 23 மாநிலங்களில் மோசடி மூலம் வெற்றி பெற்றவர்கள் ஏன் மற்ற மாநிலங்களையும் கூட கைப்பற்றாமல் விட்டு வைத்தார்கள்?

அமெரிக்கா என்னதான் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினாலும், அமெரிக்காவின் கூட்டாளிகளான ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தத் தேர்தலைக் கண்காணித்துள்ளனர். ஆனால் அவர்கள் தேர்தலில் மோசடிகள் இடம் பெற்றதாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

அதுமட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாக வெனிசூலாவில் நடைபெற்று வந்த தேர்தல்களைப் புறக்கணித்து வந்த வலதுசாரி எதிர்க்கட்சியினர் இந்தத் தேர்தலில் பங்குபற்றியுள்ளனர். அவர்களை இந்தத் தேர்தலில் பங்குபற்ற வலியுறுத்தி நோர்வேயும் நெதர்லாந்தும் அவர்களுடன் மெக்சிக்கோவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்திருந்தனர். எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே அமெரிக்காவின் ஆதரவு நாடுகளான நோர்வேயும் நெதர்லாந்தும் அவர்களை இந்தத் தேர்தலில் போட்டியிட வைத்திருந்தனர்.

ஆனால், தேர்தல் முறைகேடாக நடந்தது என எதிர்க்கட்சிகளோ அல்லது அவர்களை வலியுறுத்திப் போட்டியிட வைத்த இரு ஐரோப்பிய நாடுகளோ கூட இதுவரை குற்றச்சாட்டுகள் எதையும் முன் வைக்கவில்லை.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் தேசிய சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் இந்தத் தேர்தலைக் கண்காணிக்க வெனிசூலா சென்றிருந்தனர். அவர்கள் தலைநகர் கரகாஸ் உட்பட சில மாநிலங்களில் உள்ள 12 வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பை அவதானித்தனர். அவர்கள் பின்னர் தமது கண்காணிப்பு சம்பந்தமாக அறிக்கையிடுகையில் பின்வருமாறு கூறியுள்ளனர்:

‘எமது அவதானிப்பில் தேர்தல் நடுநிலைமையாகவும், வெளிப்படையாகவும் இருந்ததுடன், வாக்காளர்கள் நம்பிக்கையுடன் இருந்ததையும் காண முடிந்தது. தொழில்நுட்ப ரீதியில் பார்க்கையில் தேர்தல் முறைமை அடிப்படையில் வெளிப்படையானதாகவும், செயல்படும் சக்தியைக் கொண்டதாகவும் (வாக்களிப்பு ஊழியர்கள், இணைப்பாளர்கள், கடமைக்கான தலைவர்கள்), நல்ல வாக்களிப்பு இயந்திரங்களுடன் ஒன்றுபட்ட தேர்தல் முறையைக் கொண்டதாகவும் இருந்தது’.

மேலும் அவர்கள் கூறுகையில்,

‘எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் கூட வாக்களிப்பு முறையில் நம்பிக்கை கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மேலதிகமாக, வாக்களிப்பு நிலையங்களில் அது திறக்கப்பட்ட போதும் முடிக்கப்பட்ட போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தேர்தல் சட்டபூர்வமானவை என்பதும் எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலில் பங்குபற்றியதிலிருந்தும், சாட்சியங்களிலிருந்தும் தெரிய வந்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வெனிசூலாவின் தேர்தலைக் கண்காணித்த அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பாளர்களுக்கோ அல்லது தேர்தலில் பங்குபற்றிய எதிர்க் கட்சியினரின் தெரியாத ‘தேர்தல் மோசடி’ அமெரிக்காவின் காமாலைக் கண்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது என்றால், அது அமெரிக்காவைப் பீடித்துள்ள ஏகாதிபத்தியத் தன்மையுள்ள, ஜனநாயக விரோதமான அடிப்படையான நோயின் தாக்கமே தவிர வேறு எதுவுமல்ல.

திரும்பி வந்தார் திலகர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான  மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது .   

வித்தை காட்டுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்தால் தீர்வு காண முடியாது என்பதையே, நாடாளுமன்றத்தில் கடந்த 12ஆம் திகதி, நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ செயலணியில் மூன்று தமிழர்கள் சேர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானாந்தராஜா ஆகியோரே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் விளைவும்

செம்படை தனது பாதையில் சந்திக்கும் தடை கற்களால் பின்னடைவை சந்திக்கலாம், ஆனால் தடைகளை அகற்றி தொடர்ந்து வீரநடை போடும். இறுதி வெற்றி செங்கொடி ஏந்தி வரும் சோவியத்தின் செம்படைக்கே!சிந்திக்கச் சந்திப்போம், தலை நகர் சென்னையில்.செந்தீ சிந்தனைகள் நவம்பர் குளிரைக் கருக்கட்டும். புரட்சி தின வரலாறு விரி வான புறப்பாடாய் இருக்கட்டும். அரங்கத்தின் கருத்துக்களால் சிவப்பெண்ணம் சிறைமீறி திறக்கட்டும்.உங்கள் பங்களிப்பால் விதை வைக்கும் நல் நிகழ்வு மென்மேலும் சிறக்கட்டும்.சென்னையில் கூடுவோம், சிந்திப்போம், செயலாற்றுவோம்!தோழமையுடன் வரவேற்கும்,

S. Bhaskaran (UCPI)

ஓர் உண்மை நிகழ்வு!

கே.கருணாகரன் கேரள முதல்வராக இருந்த காலம்.

அவரது சொந்த மாவட்டமான திருச்சூரில் ஓர் ஐஏஎஸ் அதிகாரியை ஆட்சியராக நியமித்தார்.

முதன் முதலில் கலெக்டராக பொறுப்பு ஏற்கப்போகும் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைகிறார்.

இலங்கை: கொரனா செய்திகள்

வவுனியாவில் இருந்து  வெளிமாகாணங்களுக்கான பஸ் சேவைகள் நாளை (25) காலை முதல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய தொழில் புரிவோரின் வசதி கருதி குறித்த பஸ் சேவைகள் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

அந்தவகையில் காலை 05.45 மணிக்கு இ.போ.ச வவுனியாசாலையில் வவுனியாவிலிருந்து  கண்டி நோக்கி பஸ் புறப்படவுள்ளதுடன், காலை 06.30 மணிக்கு வவுனியாவிலிருந்து  திருகோணமலை  நோக்கி புறப்படவுள்ளது.

காலை 07.30 மணிக்கு  வவுனியாவிலிருந்து  அக்கரைப்பற்று நோக்கியும், காலை 07.00 மணிக்கு கொழும்பு நோக்கியும் பஸ்கள் புறப்படவுள்ளன.

குறித்த பஸ்களில் பயணிப்போர் அத்தியாவசிய சேவைக்குரிய அடையாள அட்டையினை காண்பித்து பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை மீறினால்? ஜனாதிபதியின் அறிவிப்பு

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்காத பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளைக் கைப்பற்றி அவசரகால விதிமுறைகளின் கீழ் கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

‘ராஜீவ் காந்தியின் டாட்டா’

(கா.சு. வேலாயுதன்)

என் மகள் அப்போது மூன்று வயதுக் குழந்தை. அவளை கக்கத்தில் போட்டுக் கொண்டு சிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக நிற்கிறார் என் மனைவி. திடிரென்று போலீசார் சாரிசாரியாக வாகனங்களை ஓரங்கட்டி நிறுத்தச் சொல்கிறார்கள். யாரோ விவிஐபி வரப்போகிற பரபரப்பு. சாலையோரம் காங்கிரஸ் கொடி தாங்கி தொண்டர்கள். தூரத்தில் பயலட் வண்டி முன்வர சயரன் சத்தத்துடன் வாகன வரிசை. சிகப்பு விளக்குகள் சுற்றல். மூன்றாவது வாகனத்தில் பளிச்சென்று தங்க ஜொலிப்பில் அந்த முகம். மனைவியின் முகத்தில் பிரகாசம். ‘அங்கே பாரு சாமி. ராஜீவ் காந்தி மாமா. டாட்டா சொல்லு’ குழந்தைக்கு கை காட்டுகிறாள் தாய். மகளும் கை காட்டி சிரித்து, டாட்டா காட்டுகிறார்கள். சாலையோரம் கைகாட்டியவர், கை கொடுத்தவர்கள், சால்வை, சந்தன மாலை தந்தவர்கள்…

தீர்த்தமாடியோரை தேடும்பணி தீவிரம்

மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி, தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்ட அடியார்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்காக, சுகாதார தரப்பினர் பொலிஸாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.