6 வருடங்களாக தமிழ்நாட்டில் சுற்றித் திரிந்த இலங்கையர்

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

பொதுமன்னிப்பு சர்ச்சை: ஜனாதிபதி கருத்து

குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள சில அதிகாரிகளே இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமீபத்திய ஜனாதிபதி மன்னிப்பு ஊழல் குறித்துப் பேசுகையில் கூறினார். 

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை அவசரப்படுத்தவும்

வடக்கில், தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல், மீன் வளத்தை அள்ளிச் செல்வது, வடக்கு மீனவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். தற்போது, கிழக்கு மீனவர்கள் மீதான அட்டூழியங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்பது அண்மையில் நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது புரிகிறது.

யாழ்ப்பாணம் பொது நூலகம்: டிஜிட்டல் மயமாக்கல் செயல் திட்டம் விரைவில்

நூலக நிறுவனமும் யாழ்ப்பாணம் பொது நூலகமும் இணைந்து  டிஜிட்டல் மயமாக்கல் செயல்திட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல் சனிக்கிழமை( 07) அன்று  நடைபெற்றது.

மன்னார்: சிந்துஜா,வேனுஜாவின் மரணத்திற்கு நீதி கோரிய மூவர் கைது

மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா மற்றும் பட்டி தோட்டத்தை சேர்ந்த வேணுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் மன்னார் பொலிஸாரால்   ஞாயிற்றுக்கிழமை(8) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய பெண் கைது

கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்காக அழகு நிலைய ஊழியரான 24 வயதுடைய பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக வதுரம்ப பொலிஸார் தெரிவித்தனர்.

சுத்தம் பேணப்படாத காரணத்தால் 5 வருட சிறை

மன்னார் சாவற்கட்டு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு  மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று (05) ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83,000  ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

மன்னார் நகர சபை பொது சுகாதார  பரிசோதகரினால் குறித்த உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது,

தலையுறை பயன்படுத்தாமை, மருத்துவ அனுமதி பெறாமை, உணவுகளை ஒழுங்கற்ற முறையில் களஞ்சியப்படுத்தியமை, கழிவுநீர் தொட்டியை உரிய முறையில் பேணாமை, சுத்தம் பேணப்படாமை போன்ற ஒன்பது குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு  நேற்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உணவகத்தில் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் அதே நேரம் உணவகத்துக்கு 83,000 ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டது.

கடவுச்சீட்டு விவகாரம்: மூவருக்கும் பிணை

துபாயில் தலைமறைவாகியிருக்கும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினருமான கெஹெல் பத்ரா பத்மேவுக்கு கடவுச்சீட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சாரதியின் பெயரில் காணி வாங்கிய முன்னாள் அமைச்சர்?

பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்தை அண்மித்துள்ள நிலம், முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும், அவர் அதை தனது ஓட்டுநர் பெயரில் வாங்கியதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியை சந்தித்தார் ரிச்சர்ட் மார்லஸ்

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின்  வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டியது.மேலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்கிழமை (03) அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.