நீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா

(விஜயகுமாரன் )

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்பில் உயிரியல் தொழிநுட்ப பிாிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவனான மகேந்திரன் தார்த்திக்கரன் என்பவர் முதலாம் இடத்தைப் பெற்று உள்ளார். கூலித் தொழிலாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவன் கிளிநொச்சியில் உருததி்ரபுரம் எள்ளுக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் இடைத்தரக் கல்வி பெறுவதற்காக செல்லும் போது இவரது ஆரம்பப் பாடசாலை தலைமை ஆசிரியர் “நீ உருப்படவே மாட்டாய்” என்று திட்டித் தான் இவரை அனுப்பி வைத்தாராம்.

(“நீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதல்வரின் சிறப்பு உத்தியோகத்தர் கனடாவில் – முதல்வர் பேரிலான மோசடிகளைத் தவிர்ப்பாரா?

(ஜனவரி 3ம் திகதி கனடா மிரர் என்ற பத்திரிகையில் வந்த செய்தியை தற்போதைய நிலைக்கும் பொருந்துவதினால் பிரசுரிக்கின்றோம்)

வடக்கு மாகாண முதல்வர் திரு.சிவி. விக்னேஸ்வரன் அவர்களின் முதன்மையதிகாரியாகப் பணியாற்றும் நிர்மலன் கார்த்திகேசு கனடாவிற்கு வருகை தந்துள்ளார். ஐக்கிய நாடுகளவையின் அபிவிருத்தித் திட்டத்திற்காக 250 மில்லியன் டொலர்களை ஐக்கியநாடுகளைவை வடமாகாணத்தில் செலவளிக்க முன்வந்தது.

(“வடக்கு முதல்வரின் சிறப்பு உத்தியோகத்தர் கனடாவில் – முதல்வர் பேரிலான மோசடிகளைத் தவிர்ப்பாரா?” தொடர்ந்து வாசிக்க…)

புத்த பெருமான் உடைப்பு.

திருகோணமலையில் 4 இடங்களில் புத்த பெருமானின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இந்த நாசகார வேலைகளை செய்தவர்கள், இனங்களுக்கிடையே ஒரு பதற்றத்தை உருவாக்கி நல்லாட்சியை கவிழ்ப்பதாக இருக்கலாம். அவர்களின் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எந்த இனமாக இருந்தாலும் , வணங்கும் தெய்வங்கள் மீது கை வைப்பது மனித உரிமை மீறும் செயல். இந்த மனித உரிமை மீறும் செயலை செய்தவர்களை நாம் மிக கடுமையாக கண்டிக்கிறோம்.

(SDPT Trinco)

‘பொலன்னறுவைக்கு தாருங்கள்’

“அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்புகள் எழுகின்றன. அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட பின்னரும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஹம்பாந்தோட்டையினை அபிவிருத்தி செய்யப்படக்கூடாது என்று எண்ணினால், அதற்கான பணத்தை எனக்குத் தாருங்கள், நான், பொலன்னறுவையை அபிவிருத்தி செய்துகாட்டுகின்றேன்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டார்.

(“‘பொலன்னறுவைக்கு தாருங்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்த கணக்கு

(ஜெம்சித் (ஏ) றகுமான்)

யகபாலனய எனும் கூட்டாற்சியை கலைக்க வேண்டும் என்ற மகிந்தவின் கணக்கு சாத்தியமாகுமா?எனும் கேள்வி அரசியல் ஆய்வாளர்களை சிந்திக்க தூண்டி இருக்கிறது.ஐ.தே.கட்சிக்கும்,சுதந்திர கட்சிக்கும் இடையே கருத்து முறண்பாடு எனும் கறையான் அரிக்க ஆரம்பித்திருக்கிறது.சுதந்திர கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்குகின்ற போது முழுமையான ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தங்கள் வசம் இழுத்து கொள்ள வேண்டும் என எத்தனித்து கொள்வதை போல் உள்ளது.2020 ஐ நோக்கிய கூட்டாற்சி பயணம் என கர்ஜித்து கொண்டிருந்த முக்கிய அமைச்சு பதவிகள் வகிக்கும் பலர் சுதந்திர கட்சி ஆட்சியமைக்கும் காலம் வெகுதூரம் இல்லை என கூறுகின்றனர்.

(“மகிந்த கணக்கு” தொடர்ந்து வாசிக்க…)

சோசலிசம்

மனிதர்களாகிய நாம் இயற்கையில் அமைந்த பொருள்களை மாற்றியமைப்பதன் மூலம் மனித வாழ்க்கைக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்து கொள்கின்றோம்.இவ் உற்பத்திக்கும், அதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கும் நாங்கள் உழைத்து வழங்கும் பங்களிப்பே நாம் செய்யும் “தொழில்” எனப்படுகிறது. இந்த உற்பத்தி நடவடிக்கைக்கான செலவீனத்திற்கு (மூலப்பொருட்கள், உற்பத்தி சாதனங்களின் தேய்மானம், எமது உழைப்பிற்கான கூலி) மேலதிகமாக ஈட்டப்படும் வருமானம் இலாபம் ஆகும்.

(“சோசலிசம்” தொடர்ந்து வாசிக்க…)

உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்…

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.இந்தப் பரீட்சையில் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 550 பேர் தோற்றியுள்ளனர். இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் விபரம் இதோ..

(“உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்…” தொடர்ந்து வாசிக்க…)

அம்மணமாய்தான் நிற்க்கின்றோம்

நாங்கள் அம்மணமாய்தான் நிற்கின்றோம்

ஆடையணிந்தால் அழகாகிடுமாம்

தெருவெங்கும் சாலையெங்கும்

மூக்கை பிடித்து மூச்சடக்கி போகும் மனிதர்களே

அந்த நாற்றத்தில் நாள்தோறும்

விழுந்து சாகின்றோம்

(தொடர்ந்து வாசிக்க…)

‘அடைக்கலப் பாம்புகள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

என் நேசத்துக்குரியவருக்கு,

இந்த வருடத்தில், இந்த வாரம் சென்னை, சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளிவந்திருக்கும் எனது மற்றுமொரு புத்தகம் ‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு. பிரபல ‘வம்சி’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இத் தொகுப்பில், விருதுகள், பரிசுகளை வென்ற சிறுகதைகள் மற்றும் புதிய சிறுகதைகளுமாக எனது 25 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதில் அடங்கியுள்ள சிறுகதைகளைக் குறித்து, நூலின் பின்னட்டை வாசகங்கள் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். இத் தொகுப்பையும், சென்னையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், ‘வம்சி’ பதிப்பக அரங்குகளில் (எண்:293,294) பெற்றுக் கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
08.01.2017

‘நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உழைப்போம்’

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும் அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அவற்றிளை உள்வாங்கி அதனடிப்படையில் செயல்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(“‘நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உழைப்போம்’” தொடர்ந்து வாசிக்க…)