நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வியாழக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

The Formula
மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக வெள்ளதில் மூழ்கியிருந்தது. இந்நிலையில் சித்தாண்டி – 2, சித்தாண்டி – 3, சித்தாண்டி – 4 ஆகிய பகுதியில் என்றுமில்லாதவாறு டெங்கு தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எப்ஸ்டீன் பிரச்சினையை மிகுந்த உணர்ச்சிவசத்துடன் தன்வயப்படுத்திக் கொண்டு எழுதப்படும் நிறையப் பதிவுகளைப் பார்க்க முடிகிறது.
எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் குறிப்பிடப்படும் அனைத்துத் தரப்பினரும் பீடபைல்கள் எனும் உணர்வு தரும் சித்திரம் இது. இது மிகத்தவறான ஒரு மனநிலை. எப்ஸ்டீனது பாலுறவு வக்கிர-கிரிமினல் நடத்தைக்கு அப்பால், இஸ்ரேலுக்கு ஆதரவாக உலக அளவில் லாபி செய்யும் அரசியல் இலக்கும் அவனுக்கு இருந்திருக்கிறது.
