இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறையின் மோசமான நிலை

இலங்கையில் 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே சேவையில் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா பதில்

இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவை நிராகரித்து இலங்கை தனியாக நடக்க முடியாது

இலங்கை கடந்த சில தசாப்தங்களில் எதிர்கொண்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் போது, ​​இந்தியா வழங்கிய கடன் வசதிகள், எரிபொருள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நாடு முற்றிலும் நிலையற்றதாக மாறுவதைத் தடுத்த ஓர் அடிப்படை காரணியாக இருந்தன.

டில்வின் சில்வா தலைமையில் புதுடெல்லிக்கு விஜயம்

இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் (ICCR) அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான ஒரு குழு, வியாழக்கிழமை (05)  காலை இந்தியாவின் புதுடெல்லிக்கு புறப்பட்டது.

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வியாழக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

தொழுநோய் விழிப்புணர்வு வீதி நாடகம்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா சந்தை பகுதியில், பொதுமக்களிடையே தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகமொன்று செவ்வாய்க்கிழமை  (03) அரங்கேற்றப்பட்டது

சித்தாண்டி கிராமத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக வெள்ளதில் மூழ்கியிருந்தது. இந்நிலையில் சித்தாண்டி – 2, சித்தாண்டி – 3, சித்தாண்டி – 4 ஆகிய பகுதியில் என்றுமில்லாதவாறு டெங்கு தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.

அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி

கொழும்பு கங்காராமய விஹாரையில் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சியைத் திறந்து வைத்ததற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05)  காலை 8.30 மணியளவில் குளவி  கூடு கலைந்து மாணவர்கள்  குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை புனித வளனார் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது

திருகோணமலை புனித வளனார் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது, இன்னும் சில தமிழ் பாடசாலைகள் தனது இறுதி மூச்சில்!

இன்று எமது மண்ணின் மிகவும் பழைய பாடசாலைகளில் ஒன்றான புனித வளனார் என்ற பாடசாலை முற்றிலுமாக மூடப்பட்டு இருக்கிறது, போதியளவு மாணவர்கள் இல்லாத காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.