என்றும் காந்தி!- 30: கருத்துச் சுதந்திரமில்லாக் காலத்துக்கு காந்தி!

சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு மோசமான காலகட்டங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, நெருக்கடி நிலை காலகட்டம், இன்னொன்று தற்போதைய காலகட்டம். கடந்த 70 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் என்று எதுவுமே கருத்து சுதந்திரப் பரிசோதனையில் மிஞ்சாது. சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (Satanian Verses) நாவலை காங்கிரஸ் அரசு தடைசெய்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ அரசு ஆண்டபோது தஸ்லிமா நஸ்ரினின் நாவலைத் தடைசெய்தது. பாஜக கட்சியும் சரி அரசுகளும் சரி அந்தக் கட்சி சார்பான அமைப்புகளும்சரி பல்வேறு புத்தகங்களுக்கும் பல்வேறு கலைஞர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. எம்.எஃப். ஹுசைன், சிவாஜியைப் பற்றிய ஜேம்ஸ் லைனின் புத்தகம் தொடங்கி பெருமாள் முருகன் வரை ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.

(“என்றும் காந்தி!- 30: கருத்துச் சுதந்திரமில்லாக் காலத்துக்கு காந்தி!” தொடர்ந்து வாசிக்க…)

இளையராஜாவின் இசை காப்புரிமை!!!!!? முழு தவறு எஸ்பிபி பக்கம்?????

இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த நோட்டீஸ் (நிச்சயம் ராஜாவுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டிருக்காது). அதுகூட எஸ்பிபிக்கு அனுப்பப்பட்டதல்ல. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஈவன்ட் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது. இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும் அதைப் பற்றி ராஜாவிடமே தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம் எஸ்பிபி. அல்லது அந்த கம்பெனி நிர்வாகிகளை அனுப்பி பேச வைத்திருக்கலாம். காப்புரிமை சட்டப்படி ராஜாவுக்கு சேர வேண்டியதைத் தரச்சொல்லி இருக்கலாம்.

(“இளையராஜாவின் இசை காப்புரிமை!!!!!? முழு தவறு எஸ்பிபி பக்கம்?????” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீடிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு முன்வைத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களின் பின்னர் இந்த நிராகரிப்பு தீர்ப்பு வழங்கப்பட்டமையின் மூலம், அந்த அமைப்பின் மீதான தடை நீடிக்கப்படுவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் செயற்பட்ட அமைப்பு எனவும், புலிகள் அமைப்பின் சட்டதரணி விக்டர் கோபேயினால் வெளியிடப்பட்ட கருத்தை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. லக்சம்பர்க் நகரத்தில் ஐரோப்பிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினால் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. புலிகள் அமைப்பு தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என புலிகள் அமைப்பின் சட்டதரணி நீதிமன்றத்தின் முன் கருத்து வெளியிட்டிருந்தார் என திவயின தகவல் வெளியிட்டுள்ளது.

தீபாவை எதிர்த்து மாதவன் திடீரென களமிறங்க காரணம் பல்லாயிரம் கோடி ரூபாய் பேரம்…. பரபரப்புத் தகவல்கள்

தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் நடுவே ஏற்பட்ட பிளவுக்கு, பணப் பிரச்சினைதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ரத்த வாரிசு என்பது தீபக் மற்றும் தீபா ஆகிய அவரின் அண்ணன் பிள்ளைகள்தான். இதில் தீபக் ஆரம்பம் முதலே சசிகலாவுடன் இருந்தார். அவரை தனது தாய் போன்றவர் என புகழுரைத்து வந்தார். ஜெயலலிதாவின் சொத்துக்களை பகிர்வதில் தீபக் திருப்தியடைந்திருந்ததே இந்த நெருக்கத்திற்கு காரணம் என கூறப்பட்டது.

(“தீபாவை எதிர்த்து மாதவன் திடீரென களமிறங்க காரணம் பல்லாயிரம் கோடி ரூபாய் பேரம்…. பரபரப்புத் தகவல்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 116 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட  தமிழ்நாட்டின் 2017-2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கத்தால்  சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு- செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

முன்னை நாள் பெண் போராளிகளால் வெற்றிகரமாக கிளிநொச்சியில் நடத்தப்படும் உற்பத்தி நிறுவனம்:

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகம் ஒன்று அமைந்திருந்த மாடிக் கட்டடம் ஒன்றில் முழுக்க முழுக்க தமிழ்ப் பெண்களால் நிறுவப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்படும் உற்பத்தி நிறுவனம் ஒன்று புதிய சந்ததிக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பொசிபிள் கிறீன் (Possible Green Ltd) என்ற அந்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் இன்று இலங்கை முழுவதும் மட்டுமன்றி உலகம் முழுவதும் தனது உற்பத்திகளை விற்பனை செய்கின்றது. ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் மட்டுமன்றி சில ஆபிரிக்க நாடுகளிலும் தனது விற்பனையை ஆரம்பித்துள்ள இந்த நிறுவனத்தின் இயக்குனர், முன்னை நாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளியான திருமதி.கோகிலவாணி. 20 இற்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் இயக்குனராக சுரபி என்ற முன்னை நாள் போராளியும், உற்பத்தி முகாமையளராக கிருசாந்தி என்ற இளம் பெண்ணும் பணியாற்றுகின்றனர்.

(“முன்னை நாள் பெண் போராளிகளால் வெற்றிகரமாக கிளிநொச்சியில் நடத்தப்படும் உற்பத்தி நிறுவனம்:” தொடர்ந்து வாசிக்க…)

நெத‌ர்லாந்து தேர்த‌ல்

இட‌துசாரி ப‌சுமைக் க‌ட்சி மாபெரும் வெற்றி ஈட்டியுள்ள‌து. த‌லைந‌க‌ர் ஆம்ஸ்ட‌ர்டாமில் அதுவே பெரிய‌ க‌ட்சி. அதே நேர‌ம், வ‌ல‌துசாரி அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ போலி இட‌துசாரி தொழிற்க‌ட்சி (PvdA) ப‌டுதோல்வி அடைந்துள்ள‌து. இவ்வ‌ள‌வு கால‌மும் பெரிய‌ ஆளும் க‌ட்சிக‌ளில் ஒன்றாக‌ இருந்த‌து. வெறும் 9 ஆச‌ன‌ங்க‌ளை ம‌ட்டும் எடுத்துள்ள‌து. இது ஒரு வ‌ர‌லாற்றுத் தோல்வி ஆகும். புதிய‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Groen Links (ப‌சுமை இட‌து), க‌ட‌ந்த‌ தேர்தலை விட‌ 10 ஆச‌ன‌ங்க‌ள் அதிக‌மாக‌ப் பெற்றுள்ள‌து. அது1992 ம் ஆண்டு உருவான‌ ந‌வீன‌ இட‌துசாரிக் க‌ட்சி ஆகும். ப‌ழைய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி (CPN), ம‌ற்றும் இர‌ண்டு முற்போக்கு க‌ட்சிக‌ள் சேர்ந்து உருவாக்கின‌.

வடகொரியா: ஒரு கொலையின் கதை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கதைகள் பலவிதம். சொன்ன கதைகள், சொல்லாத கதைகள், சொல்ல விரும்பாத கதைகள், பழைய கதைகள், புதிய கதைகள், மறைக்கப்பட்ட கதைகள், கட்டுக்கதைகள் எனக் கதைகளின் தன்மை, அதன் விடயம் சார்ந்தும் சொல்லப்படும் அல்லது சொல்லாது மறைக்கப்படும் காரணங்களுக்காக வேறுபடுகிறது. சமூகத்தில் கதைகள் ஒரு வலுவான செய்தி காவும் ஊடகமாக நீண்டகாலமாக நிலைத்துள்ளது. குறிப்பாக ஊடகங்கள் பல செய்திகளைக் கதைகளின் வடிவில் தருவதன் ஊடு, அச்செய்தி சார்ந்து ஓர் உணர்வு நிலையை உருவாக்குகின்றன.

(“வடகொரியா: ஒரு கொலையின் கதை” தொடர்ந்து வாசிக்க…)

இரோம் ஷர்மிளா மன்னிப்பாராக…

கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ந்தேதி மணிப்பூரில் உள்ள மலோம் என்ற சிறிய நகரத்தின் மோசமான காலை வேளை. 28 வயது பெண் கவிஞர் ஒருவர் அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார். தட…தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரற்ற உடல் தரையில் பொத் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது. ஏன்.. எதற்கு என்றே தெரியாமல் சக உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்து பதை பதைக்கிறார் அந்தப் பெண். கண் முன்னே சக உயிர்கள் பறிக்கப்படுவதைக் கண்டு கதறித் துடிக்கிறார்.

(“இரோம் ஷர்மிளா மன்னிப்பாராக…” தொடர்ந்து வாசிக்க…)

ஜனநாயகம் வாழ வாழ்த்திடுவோம் 

தோழர் விஸ்வலிங்கம் சிவலிஙக்த்திற்கு  (16.03.17)அகவை 70வது இன்றைய மனிதகுலத்தின் தேவைக்கு அப்பால் தனிபட்ட சுயநலத்திற்காக  ஜனநாயகம் என்ற சொல்லை பயன்படுத்துகின்ற இக்கால கட்டத்தில் ஜனநாயகத்திற்காக வாழ்கின்ற தோழர் சிவிலிங்கத்திந்கு எங்கள் பிறந்த தின வாழ்த்துக்கள்.

(“ஜனநாயகம் வாழ வாழ்த்திடுவோம் ” தொடர்ந்து வாசிக்க…)