யாழின் பல பகுதிகளுக்கு வட மாகாண ஆளுநர் விஜயம்

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். மாவட்டத்தில் சில இடங்களுக்கு, இன்று (02),  நேரில் சென்று பார்வையிட்டார்.  பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா  பாதுகாப்பு நடவடிக்கைகள், ஏனைய அபிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் குறித்து இதன்போது கேட்டறிந்துகொண்டார். இதேவேளை, குறித்த பகுதிகளுக்கு யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், யாழ். பிரதேச செயலாளர்  மற்றும் அரச உத்தியோகத்தர்களை நேரில் அழைத்து, நிலைமை குறித்தும் கலந்துரையாடினார்.