யாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான அரியாலை கிழக்கு மனித நேய வேலை திட்டத்துக்காக இராணுவத்தால் தத்தெடுப்பு

யாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அரியாலை கிழக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான கேந்திர பிரதேசமாக தத்தெடுக்கப்பட்டு உள்ளது.

சர்ச்சைக்கு உரிய காரைதீவு பிரதேச சபையிலே மீண்டும் பரபரப்பு, பிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை

வரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு பிரதேச சபையில் பிரதி தவிசாளர் ஏ. எம். ஜாஹீர் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் அட்டப்பள்ளம் பிலோமினாவுக்கு தேசிய சாதனை விருது

விழாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு வீட்டில் வறுமை

நாடளாவிய ரீதியில் இந்து அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆக்க திறன் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அட்டப்பள்ளத்தை சேர்ந்த சிறுமி ஜெ. பிலோமினா மகத்தான வெற்றி ஈட்டி தேசிய சாதனை புரிந்து உள்ளார்.

‘‘மன்னிக்க முடியாது’’ – வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வெனிசுலாவிடம் இருந்து பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

நெடுந்தீவில் 5 ஆண்டுகளாக வைத்தியர் இல்லை

நெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் போதனா வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு திறப்பு

யாழ் போதனா வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதி தீவிர சிகிச்சைப்பிரிவு இன்று (14) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவும் கலந்து கொண்டிருந்தார். குறித்த சிகிச்சை பிரிவானது 245 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன.

வெனிசுவேலா: இன்னோர் அந்நியத் தலையீடு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
அயற்தலையீடுகள் ஆரோக்கியமானவையல்ல; அவை எந்த நியாயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டாலும், ஒரு நாட்டின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்கள். ஆனால், உலகெங்கும் அயற்தலையீடுகள் நடந்தவண்ணமுள்ளன. அவை பல்வேறு முகாந்திரங்களின் கீழ் நடந்தேறுகின்றன. அவை வேறுபாடின்றிக் கண்டிக்கப்பட வேண்டியவை.

விக்கியின் கனவு வீணாகிப் போகுமா?

-க. அகரன்

மாற்றுக்கருத்து என்ற சொல்லால் தமிழர் அரசியல் களம் நீண்ட காலமாகவே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது.
அந்தவகையில், ‘மாற்றுக்கருத்து’ என்பது ஒரு கொள்கையுடன் பயணிக்கும் ஒருசாராருக்கு எதிராக, அந்தக் கொள்கையில் நம்பிக்கையற்றவர்களால், பிடிப்பற்றவர்களால் புதியதொரு கொள்கையில் நம்பிக்கை வைத்து, அவ்வழியில் முன்னெடுக்கப்படும் பயணம், பிரசாரப்படுத்தப்படும் கொள்கைகள், மாற்றுக்கருத்து அல்லது மாற்றுக்கொள்கை என வரையறுத்து ஆராயப்படலாம்.

சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சம்

வங்கக் கடலில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாததால் வழக்கம்போல் மெரினா கடற்கரையில் கூடி மகிழ்ந்த பொதுமக்கள். சென்னையில் நேற்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு

(இலட்சுமணன்)

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, ‘திருவிளையாடல்’ பாணியில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றன.