புர்காவைத் தடைசெய்வதற்கான ஆணையில் கைச்சாத்திட்ட அமைச்சர்

இலங்கையில் புர்காவைத் தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரத்தில், தான் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சரான, ஓய்வுபெற்ற றியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தீ விபத்து; 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்தால் அந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் – சென்னை விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார். அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 351 பேர் இன்று(11) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 83,561 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன், தொற்றுக்குள்ளான மேலும் 2,609 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு தொழிலாளர்களின் ஒற்றுமையே காரணம்’

மஸ்கெலியா, சாமிமலை – ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், நேற்று (10) பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு, தொழிலாளர்களின் ஒற்றுமையே காரணம் என, தொழிலாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நேரு கருணாகரன் தெரிவித்தார்.

200க்கும் குறைவான பாடசாலைகள் மூடப்படும்

200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக, தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் செயல்திறத்தைப் போன்று பௌதிக மற்றும் மனித வளம் தொடர்பில் நிலவும் முறன்பாடுகள் இதற்கு காரணமாகும் என்று அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘தோல்நிற கரிசனைகளால் மகனை இளவரசாக்க மறுத்த அரச குடும்பத்தினர்’

தனது மகனின் தோலானது எவ்வளவு கறுப்பாக இருக்கும் என்பது தொடர்பான கலந்துரையாடல்களால், தனது மகன் ஆர்ச்சியை இளவரசராக்க பிரித்தானிய அரச குடும்பம் மறுத்ததாக, இளவரசர் ஹரியின் மனைவி மேர்கன் மார்க்கிள் தெரிவித்துள்ளார்.

இரத்தக்களரி ஏற்படுத்தும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!

(Maniam Shanmugam)


இலங்கையில் ‘பாரதீய ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை சில தமிழர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தக் கட்சியின் ஊடக மாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கட்சியைத் தொடங்கியவர்கள் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களை வாழ்விடமாகக் கொண்டவர்கள் அல்லவென்றும், கொழும்பை வதிவிடமாகக் கொண்டு வர்த்தகம் செய்பவர்கள் என்றும் தெரிய வருகிறது. அத்துடன் இது இலங்கையிலுள்ள அனைத்து இனங்களுக்கான கட்சி அல்லவென்றும் தெரிய வருகிறது.

சர்வதேச மகளிர் தினம்

(சாகரன்)

நமது வீட்டிற்குள் தாயாக… மனையாளாக…. மகளாக… பேத்தியாக… எல்லாவுமாக இருப்பவள் இந்த பெண்தான். தாங்கும் தங்கையாகவும் தூக்கிவிடும் அக்காவாகவும் இருப்பவர்களும் இதே பெண்கள் தான்.

அலெக்சாண்டிரா கொலேண்டை (Alexandra Kollontai):

(Maniam Shanmugam)

அலெக்சாண்டிரா கொலேண்டை (Alexandra Kollontai):
லெனின் அமைச்சரவையில் இருந்த ஒரே பெண்!
1917இல் ரஸ்யாவில் லெனின் தலைமையில் சோசலிசப் புரட்சி நடந்து, லெனின் தலைமையில் புதிய சோவியத் அரசாங்கம் அமைந்தபோது, அலெக்சாண்டிரா கொலேண்டை என்ற பெண் ஒருவரும் அவரது மந்திரிசபையில் இடம் பெற்றார். அந்தக் காலகட்டத்தில் ரஸ்யாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதுமிருந்த விரல் விட்டெண்ணக்கூடிய பெண் அமைச்சர்களில் அவரும் ஒருவர் எனக் கூறலாம்.