’அரசாங்கம் அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை’

“மாகாண சபை தேர்தலை இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை” என்று அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தலைமன்னார் விபத்தில் 23 பேர் காயம்


தலைமன்னாருக்கு அருகில் ரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் விபத்தில் ஒன்பது வயதான மாணவன் பலியாகியுள்ளார், சம்பவத்தில் 23 ​பேர் படுகாயமடைந்துள்ளனர்.

என் தம்பியின் மரணம்

(Gnanasakthy Sritharan)

1987 மார்ச் 16 பேரிடியாக பேரதிர்ச்சியாய் வந்த செய்தி என் தம்பியின் மரணம். இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக. அவன் அக்காலத்தில் முல்லைத்தீவு தேவி புரத்தில் ஈழப்புரட்சி அமைப்பில் செயற்பட்டான் எம்மைப்பொறுத்தவரை அவரது உடலையோ அவர்தொடர்பான வேறு எந்த ஆதாரங்களையோ நாம் பெறமுடியவில்லை.

வல்லாதிக்க நாடுகளின் புதிய ஆயுதம்!

(Maniam Shanmugam)

மேற்குலக நாடுகள் தமது உலக ஆதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டுவதற்காக புதிய புதிய ஆயுதங்களைக் கண்டு பிடித்து வருவதில் சமர்த்தானவை. இப்பொழுது அவை கண்டு பிடித்திருக்கும் ஆயுதம் கொவிட் – 19இற்கு எதிரான தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசி இந்த ஆதிக்க நாடுகளால் கொவிட்டுக்கு எதிராக மட்டுமின்றி, ஏழை நாடுகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. புள்ளி விபரங்களைப் பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வி அடையும்

சட்டசபை தேர்தலில் தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வி அடையும் என்று சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அசாம் தவிர மற்ற 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வியை தழுவும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கோபானியின் புதல்விகள்: வீரம்மிகு பெண்களின் கதைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பெண்விடுதலையை, சமூக விடுதலையின் கூறாகவும் சமூக மாற்றத்தின் தவிர்க்கவியலாத அம்சமாகவும் காணுவது அடிப்படையானது. பெண் ஒடுக்கு முறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையைத் தரும் களங்கள், எம்முன்னே விரிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் நிறையவே உண்டு.

இலங்கை: கொரனா செய்திகள்

கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்தவர்களில், மேலும் 395 பேர் பூரண குணமடைந்து இன்று(14) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,648 ஆக அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு விமான நிலையத்தை, ’சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டுகோள்’

மட்டக்களப்பு விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியுடன் மோடி இன்று கலந்துரையாடியுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசியில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 250 நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுத் திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 84 ஆயிரத்து 253 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் மேலும் 179 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.