யாரை திருப்திப்படுத்த ரிஷாட்டை கைது செய்தீர்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கதென்றும் சாடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரான அமீர் அலி, யாரை திருப்திப்படுத்துவதற்கு ரிஷாட் கைதுசெய்யப்பட்டார் என வினவினார்.

இலங்கை: கொரனா செய்திகள்

தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, அரச ஊழியர்களை பகுதி,பகுதியாக வேலை செய்ய அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை நாளை (26) வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

செர்னோபில் அணு உலை விபத்து

(Suresh Turai Kanapathypillai)

( இந்த சம்பவம் நடந்த அதே சமயத்தில் அதிகாலை இரண்டு மணியளவில் அதே உக்ரைன் வான் பரப்பில், தரையில் நடக்கும் விபரீதம் தெரியாமல் விமானத்தில் பறந்து கொண்டு இருந்தேன்)
இன்றோடு சரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன அந்தக் கொடும் விபத்து நடந்து. ஒரு பேரழிவிற்கு உலகம் சாட்சியாக இருந்த தினம் இன்று. ஒரு பேரழிவு இதன் மூலமாகவும் நிகழலாம் என்று உலகம் உணர்ந்த தினம் இன்று. செர்னோபில் அணு உலை விபத்து நடந்த தினம் இன்று.

நாம் தமிழர் கட்சி ஆவணம் : ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப்பெரிய சவால்

(Arunmozhi Varman)

கட்டுரையை வாசிக்கும் முன்னான சிறுகுறிப்பு :
2012ம் ஆண்டு மேமாதம் அளவில் நாம் தமிழர் கட்சியினர் தமது கட்சியின் அறிக்கையை வெளியிட்டனர். இவ் ஆவணத்தில் இருக்கின்ற கருத்திய ரீதியிலான முரண்கள் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தளங்களில் குறிப்பாக சமூக வலைத் தளங்களில் நடைபெறுகின்றன. அந்நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் / அமைப்பாளர் சீமான் மற்றும் அவர் அரசியல் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும், அவருக்கான ஆதரவான போக்கென்பது என்னுடன் இருந்தே வந்தது. அந்த அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் மேற்குறிப்பிட்ட அந்த ஆவணத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டேன். அனுப்பி வைப்பதாக கூறினார்களே அன்றி ஒருபோதும் அனுப்பி வைக்கவில்லை. அதன்பின்னர் அதனை வேறு சில நண்பர்கள் ஊடாக பெற்றுக்கொண்டு மிக மிக அபத்தமான, ஆபத்தான அந்த ஆவணத்தைப் படிக்க நேர்ந்தது. அதன் பயனாக எழுதிய கட்டுரை இது.

மன்றத்தில் தூங்குவது யார்

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் தொடர்பான புள்ளிவிபர தகவல் தொடர்பில் கடைசி பத்து இடங்கள் தொடர்பில் கலாய்த்துக் கொண்டிருக்கும் எம்மவர்க்கு சில விஷயங்களை புரிய வைக்க வேண்டியுள்ளது.

‘பாலியில் நீர்மூழ்கி மூழ்கியது’

பாலிக் கரையோரத்தில் 53 பேருடன் கடந்த புதன்கிழமை காணாமல்போன நீர்மூழ்கியொன்று இழக்கப்பட்டுள்ளதாக, இந்தோனேஷியக் கடற்படை நேற்று தெரிவித்துள்ளது.

அதிகாரத்தின் உரையாடல்: ஆண்டகைக்கும் அழைப்பு வந்ததா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கடந்த வார அரசியற்களம் ‘தொலைபேசி அழைப்பு’களால் நிரம்பியிருந்தது. இங்கு இரண்டு நிகழ்வுகள் முக்கியமானவை. ஒன்று, கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில், விஜயதாஸ ராஜபக்‌ஷ எம்.பி தெரிவித்த கருத்துகளை அடுத்து, ஜனாதிபதி, அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கடுந்தொனியில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தான் பேசிய கருத்துக்கு முற்றிலும் மாறாக, மறுநாள் கருத்து வெளியிட்டிருந்தார். அதிகாரத்தின் குரலின் வலிமையை, நாம் ஐயப்பட வேண்டியதில்லை. ஆனால், அதை விளங்குவதே இன்று நம்முன்னுள்ள சவால்.

புதுடெல்லியில் ஊரடங்கு நீடிக்கும் அபாயம்

புதுடெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாக லாம் எனத் தெரிகிறது.

‘பதியூதீன்களை இன்று அதிகாலை கைது செய்தது ஏன்?’

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, விளக்கப்படுத்தியுள்ளார்.