வரி வாரம் ஒன்றை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்

“பது சக்தி” என்ற பெயரில் வரி வாரம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் யூ.டி.என். ஜயவீர தெரிவித்தார். 

போலந்து வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர், போலந்து குடியரசின் வௌிவிவகார அமைச்சர் ரடொஸ்லாவ் சிகோர்ஸ்கி நேற்று  (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

சீன அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ, நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்

காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல்  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட்டத்தை முன்மொழிந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், காசா பகுதியில் பணயக்கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினரிடம் நெதன்யாகு தனது ஒப்புதலை தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

குருந்தூர் மலை விவசாயிகளுக்கு மீண்டும் விளக்கமறியல்

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும்  ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும்  விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் (29) உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 11இல் விசாரணை ஆரம்பம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோரின் வழக்கு ஜூலை 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

பலத்த காற்று தொடர்பில் ஆம்பர் நிற எச்சரிக்கை

நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. 

6ஆம் தரத்தில் மாணவர்களை உள்வாங்குவதற்கான பெறுபேறுகள் வெளியாகின

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான முதல் சுற்று மேன்முறையீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

நடிகர் திரு. ராஜேஷ் காலமானார்

(Hussain CPI)

திரைப்பட நடிகர் திரு. ராஜேஷ் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

1980களில் இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான சென்னை பாலன் இல்லத்திற்கு அடிக்கடி வருவார் நடிகர் ராஜேஷ் !
அலுவலகத்தில் இருந்த NCBH பதிப்பகத்தின் விற்பனைக்காக வைக்கப்பட்ட நூல்கள் பலவற்றை வழக்கமாக வாங்கிச்செல்வார்.

லலித் அம்பன்வில.

இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரியுமா ? இன்றைய தினம் இருபது வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மகிந்தானந்தவின் வழக்கை முன்னெடுத்துச் செல்ல உதவிய superintendent of audit லலித் அம்பன்வில.