தோழர் றொபேட் த.சுபத்திரன் அவர்களின் 22 ஆவது நினைவு தினம்

(Mohan Sivarajah)

தோழர் றொபேட் த.சுபத்திரன் அவர்களின் 22 ஆவது நினைவு தினம் இன்றாகும். அவர் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த காலத்தில் வைபவம் ஒன்றில் அவர் ஆற்றிய சிறு உரையை காலப்பொருத்தம் கருதி இங்கு பதிவிடுகிறேன்.

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான்

ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.  இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது 

ஈரான் அழியப் போகிறது : டிரம்ப் விடுத்த பயங்கர எச்சரிக்கை

அமெரிக்கா உலகின் மிகவும் கொடிய ஆயுதங்களை தயாரிக்கிறது, அவற்றில் பல இஸ்ரேலிடம் இருக்கிறது. இஸ்ரேல் அதை ஈரான் மீது பயன்படுத்த தயங்காது. இதனால் ஈரான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

பெற்றோர்களின் கவனத்துக்கு….

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, காய்ச்சல், சளி, இருமல் உள்ள பிள்ளைகளை பாடசாலை மற்றும் பாலர் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வலுக்கும் போர்: ஹமாஸின் பதிலடி கருத்து

இஸ்ரேல் – ஈரான் போர் வலுத்துவரும் நிலையில், ஹமாஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. ஹமாஸ் சிரேஷ்ட தலைவர் இசாத் அல் ரிஷக், “அயன் டோம் பற்றி பெருமை பேசிக் கொள்ளும் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தோற்றுவிட்டன. மத்திய கிழக்குப் பிராந்திய மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இஸ்ரேல் மூட்டிய நெருப்பு இஸ்ரேலை தாக்குகிறது. ஈரானின் பதில் தாக்குதல், ‘எந்த ஒரு அடாவடித்தனத்துக்கும் பதிலடி உண்டு, எந்த ஒரு அடக்குமுறைக்கும் தண்டனை உண்டு’ என்பதை நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்

வாகனங்களை விற்பனை செய்த இருவர் கைது

வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

தெல்லிப்பளையில் ஆர்ப்பாட்டம்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வைத்தியசாலைக்கு முன்பாக  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், வெள்ளிக்கிழமை (13) காலை முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இஸ்ரேல்-ஈரான் போர்: பின்னணியில் அமெரிக்கா?

“அமெரிக்க ஆதரவும், அனுமதியும் இல்லாமல் இஸ்ரேல் இதுபோல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பேயில்லை.” என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்கே தெரிவித்துள்ளார்

ஈரான் – இஸ்ரேல் போர் : இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை அடுத்து குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அருகிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுவதாக அருண் ஹேமசந்திரா குறிப்பிட்டுள்ளார்.  இந்த விடயங்கள் தொடர்பில் பிரதியமைச்சர் தமது பேஸ்புக் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். 

இந்த அழிவிற்கு நியாயங்கள் எங்கும் இல்லை

(Siraj Mashoor)

·கடந்த 24 மணித்தியாலங்களில் மத்திய கிழக்கின் கொதிநிலை, மிகவும் உச்ச கட்டத்தில் இருக்கிறது. ஈரானைத் தாக்கியதன் மூலம், பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மையை, இஸ்ரேல் வேண்டுமென்றே குலைத்துள்ளது. வலிந்து சண்டைக்கு இழுக்கிறார்கள்.