இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம்

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் சுற்றித் திரிந்த இலங்கையர்கள் மூவரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அப்போது அவர்கள் இலங்கை பேசாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

பூமிக்கு அடியில் இதயத்துடிப்பு : கண்டத்தைக் கிழித்து புதிதாக உருவாகும் கடல்

தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் சைலண்டாக ஒரு முக்கியமான மாற்றம் நடக்கிறதாம். இது கிட்டதட்ட இதயத்தின் துடிப்பைப் போல இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் பூமியில் புதிதாக ஒரு கடல் உருவாகும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தல்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் இன்று (27) காலை கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. சபையின் அமர்வை நடத்துவதைத் தடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது, தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களையும் சபைக்கு அழைத்து வந்தால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜே.வி.பி கூறுகிறது.

யாழ். மாநகர சபை விசேட அமர்வில் குழப்பம்

நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ். மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை (27)விசேட அமர்வுக்காக கடந்த 23 ஆம் திகதியன்று திகதியிடப்பட்டிருந்தது.

முன்னாள் தலைவர் உபாலி லியனகே கைது: பிணையில் விடுவிப்பு

இலங்கை மீன்வளத் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் (CFHC) முன்னாள் தலைவர் உபாலி லியனகே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானி இடைநிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க தாக்குதல்: இழப்பீடு கோரும் ஈரான்

அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஐ.நாவில் புகார் அளிக்கப்படும் எனவும் ஈரான் கூறியுள்ளது.

திருப்பி அடித்த ஈரான்: அமைதியை அறிவிப்பை ஏற்படுத்தியது

(தோழர் ஜேம்ஸ்)

ஒருவன் வந்தான் அடி என்றான் அடித்தான் மற்றவன்….

அடி வாங்கியவன் எத்தனை நாளைக்குத்தான் உள் வீட்டிற்குள்ளை வந்து விஞ்ஞானிகள், தளபதிகள், அரசியல் முக்கியஸ்தர்களை உளவு நிறுவனத்தின் கள்ளத்தனத்தால் கொன்று கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருப்பான்…?

மூன்றாம் உலக போர் பதற்றத்தை தணித்த போர் நிறுத்தம்

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் அமெரிக்கா ஈடுபட்டதால், மிகவும் சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த சிக்கலை அமெரிக்காவே தீர்த்துள்ளமை வரவேற்கத்தக்கது. தற்போதைய போர்நிறுத்தம், தற்காலிகமானதாக இல்லாமல், போரையே நிறுத்துவதாக அமையவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.

’’விவசாயிகளை வருங்கால மணமகன்களாகக் குறிப்பிடுவதில்லை’’

விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த கூறுகிறார், இது தற்போது மற்ற திறமையான தொழிலாளர்களுக்கு இணையாக இல்லை என்று கருதப்படுகிறது.