மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தப்படும் என இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது.
Month: August 2025
செம்மணி செல்லும் மனித உரிமை ஆணைக்குழு
பேருந்து கவிழ்ந்து விபத்து : 42 பேர் காயம்
கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் இன்று (02) காலை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 42 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ICE போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது
50.410 கிராம் ICE போதைப்பொருளுடன் 37 வயதுடைய வெளிநாட்டவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் செல்லுபடியாகும் விசா இல்லாமல் நாட்டில் வசித்து வருவது மேலும் தெரியவந்தது. பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மணி பொருட்களை அடையாளங்காண பொதுமக்களுக்கு அழைப்பு
வலிமையான எதிர்கால தலைமுறையே நாட்டிற்கு தேவை- பிரதமர் ஹரினி
பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்தல்
நில வரைபடங்களை நாளை முதல் ஒன்லைனில் அணுகலாம்
நில அளவை வரைபடங்கள் நாளை, ஓகஸ்ட் 01, 2025 முதல் நிகழ்நிலையில் கிடைக்கும் என்று நில அளவையாளர் நாயகம் வை.ஜி. ஞானதிலக இன்று அறிவித்தார். நில அளவைத் திணைக்களத்தின் 225வது ஆண்டு நிறைவு குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மீதான வரியை 20 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்கா
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு 2025 ஓகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது.
