யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ஐந்து மாடி கட்டிடம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஐந்து மாடி கட்டிடமொன்றை நிர்மாணிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய-பாகிஸ்தான் அணிகளிடம் இல்லாது போன ‘விளையாட்டு அறம்’

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவருகின்ற ஆசியக் கிண்ணத் தொடரில், ஞாயிற்றுக்கிழமை(14) அன்று நடைபெற்ற இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. இந்த போட்டியில் இந்தியா வென்றது. 

இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

உலகிற்கு எடுத்துச் செல்ல தலையிடுங்கள் – ஜனாதிபதி அனுர

ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டமங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதன் ஊடாக இலங்கைக்கு  புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக வங்கி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்தது உறுதி : ஐ.நா அறிவிப்பு

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

போதைப்பொருளுடன் மூவர் சிக்கினர்

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை போதை குளிசைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் 18, 29 மற்றும் 21 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஜப்பானுடன் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்து

ஜப்பான் அரசிடமிருந்து மொத்தம் 963 மில்லியன் ஜப்பானிய யென் (அண்ணளவாக ரூ. 1.94 பில்லியன்) மானியத்தைப் பெறுவதற்காக, ஜப்பான் நாட்டிற்கான தனது வரவிருக்கும் அரச பயணத்தின் போது, ​​ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.

இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்த அங்கிகா​ரம்

1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தை திருத்துவதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்த யோசனைக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை பஸ் மீது ‘கிளேமோர்‘ தாக்குதல் நடத்த திட்டம்

சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது. பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

’குடியேறிகளே வெளியேறுங்கள்’ : லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?

பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். அப்போது பேரணியில் பங்கேற்ற ஒரு குழுவினர் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.