போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க: 9 மாகாண மக்களுக்கும் முக்கிய அறிவித்தல்

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை -காவல்துறை தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ,

நெடுந்தீவில் விலங்குகள் இல்லை

வனவிலங்கு கணக்கெடுப்பு அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் சுமார் 50 சதவீதமானவையே துல்லியமானவை என கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 7 பௌத்த துறவிகள் மரணம்

குருநாகலை – மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மதகுருமார்களை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய துறவிகளும், கம்போடிய துறவி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

5,000 ரூபாயை நுகர்ந்து 90,000 ரூபாயை இழந்த சாரதி

ஏதாவது ஒரு பொருளை எடுக்கும் ஒவ்வொருவரும் அதை தங்களுடைய மூக்குக்கு அருகில் கொண்டு சென்று நுகர்ந்து பார்ப்பார்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் இந்த பழக்கம் வழக்கமாகவே இருக்கின்றது. குழந்தைகள் சிலர், அந்தப் பொருளை கடித்தும் பார்ப்பார்கள். 

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

”விதவை சம்பளத்தை வழங்கு”

போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. விதவை சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடங்குவதற்கு முன்பு, போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாகச் சென்றனர். 

ஜனாதிபதி – தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் (23) பிற்பகல் (அமெரிக்க நேரப்படி ) இடம்பெற்றது.

மலையகத்தில் புதிய தொழிற்சங்கம்?

மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்று விரைவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. பெரிய தொழிற்சங்கங்கள் மீது காணப்படும் குறைபாடுகள், அதிருப்திகள் காரணமாக புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கும் முயற்சி  மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணிலை கைதுசெய்ய உத்தரவிட்ட நீதவானுக்கு நடந்தது என்ன?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதவானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதவானுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உ/த பரீட்சார்த்திகள் சிறந்த பொழுது போக்கை களிக்கரூ.5,000 கொடுப்பனவு

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று முன்மொழிந்தார்.