மன்னாரிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

யாழ்ப்பாணத்தில்   சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  வடமாகாண  சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (07) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.  குறித்த பணிப் புறக்கணிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் சட்டத்தரணிகளும்  பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

கிழக்கில் 230 கிராம் ஐஸ்: இளம் தம்பதி கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்த 230 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 24,23 வயதுடைய இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம்: பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் பயிற்சி நிபுணர் மருத்துவரை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வழக்கில் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர் செவ்வாய்க்கிழமை (07) பிணையில் விடுவிக்கப்பட்டார். அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

கொழும்பிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று 158 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் பயணத்தை ரத்து செய்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலம்பிடியவின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

தங்காலை, கட்டுவன பகுதியில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஜூலம்பிடிய அமரேவுக்கு தங்காலை மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (07) உறுதி செய்தது. ஜி.ஜி. அமரசிறி அல்லது ஜூலம்பிடிய அமரே தாக்கல் செய்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்

இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு அவர்களின் சம்பளத்தில் பாதியை வழங்க முடிவு செய்துள்ளது, அதே நேரத்தில் பல கொடுப்பனவுகளை நீதித்துறை சேவை ஆணைக்குழு (JSC),  நிறுத்தி வைத்துள்ளது.

அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனிர் ஆகியோர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

நியமிக்கப்பட்ட ஒரு நாளுக்குள் விலகிய பிரெஞ்சு அரசாங்கம்

பிரெஞ்சின் புதிய பிரதமர் செபஸ்டியன் லீகொர்னு தனது அமைச்சரவையை அறிவித்த ஒரு நாளுக்குள் அவரும் அவரது அரசாங்கமும் இன்று இராஜினாமா செய்துள்ளனர்.

மயிலத்தமடு: இரண்டு வருடம் கடந்த போராட்டம்

(லக்ஸ்மன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை,  மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். 

‘கல்வி’ என்ற சொல் லத்தீன் வார்த்தையான ‘ஜ்ஞாபஜதா’ என்பதிலிருந்து ஆங்கிலத்தில் உருவானது, அதாவது உள்ளிருந்து வளர்வது. அதன்படி,‘கல்வி’ என்ற வார்த்தைக்கு உள்ளிருந்து சக்திகளை வளர்ப்பது என்று பொருளாகும். அந்த கல்வியை நமக்கெல்லாம் ஊட்டிய ஆசிரியர்களுக்கான தினம், ஒக்டோபர் 05 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.