ஐ.தே.க முக்கியஸ்தர்களை சந்தித்தார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே இன்று (30) மதியம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

வடக்கில் பெரும் ஆபத்து விரைவாக பகிருங்கள்

சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சியில் எனக்கு தெரிந்த இளம் குடும்பத்தினர் மரணித்திருந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை வினவிய போது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது ஆதாவது அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதன் காரணமாக அவர் மரணித்ததாக.

அரசியல் என்பது ஒரு “தொழில்” அல்ல என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு சுவீடன்!

நமது நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது அவர்களது பரம்பரைக்கு மாத்திரமே என உள்ள அரசியல் வாதிகள்
பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் பழைய வேலைக்கே செல்ல வேண்டிய நாடு பற்றித் தெரியுமா? அரசியல் என்பது ஒரு “தொழில்” அல்ல என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு சுவீடன்!

கால்நடை கட்டுப்பாட்டு விதிமுறைகள் – ஒரு கட்டுரை


(தனபாலசிங்கம் துளசிராம்  ( கைதையூரான் ))

2011 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்தச்) சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்திச் சட்டத்தின் பாகம் VIII (பொதுவான ஏற்பாடுகள்) – உட்பிரிவு 92 இன் பிரகாரம், பயிற்செய்கை நிலங்களில் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான தெளிவான சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அல்ஜீரிய பாராளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ள தீர்மானம்

(Ravindran Pa)

அல்ஜீரிய பாராளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ள தீர்மானம் காலனியவாதிகளை நோக்கிய நியாயமான குரலாகும். அந்த நாட்டை 130 வருடங்களுக்கு மேலாக கானியாக்கிய பிரான்ஸ் நாட்டை பொறுப்புக் கூற கோருகிறது அந்த தீர்மானம்!. நஷ்ட ஈட்டை கோருகிறது.

புதிய இஸ்லாமிய நாடு உதயம்

இந்திய பெருங்கடல் அருகே இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் சோமாலிலாந்தை   தனிநாடாக இஸ்ரேல் சனிக்கிழமை (28) அன்று அங்கீகரித்துள்ளது.

வணிக நிலையங்களுக்கு ஒருவருட அவகாசம்

கட்டிட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒருவருட அவகாசம், பருத்தி துறை பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுக்தீஸ் தலைமையில் திங்கட்கிழமை (29) அன்று காலை 9:30 மணியளவில் இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.

நாளை அடையாள தொழிற்சங்க போராட்டம்

அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய இரண்டு கடிதங்களை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

நிபந்தனை மீறப்பட்டால் திரும்பப் பெறப்படும்

ஊடக அமைச்சினால் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு  வழங்கப்படும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து? – முன்னாள் ஆளுநர் UNP சுரேன் ராகவன்

கைது செய்யப்பட்டு மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமனா சுரேன் ராகவன் கவலை தெரிவித்துள்ளார்.