பதுளையில் சேதமடைந்த 165 வீதிகளில் 111 வீதிகள் சீரமைப்பு

நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சுமார் 165 வீதிகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவற்றில் 111 வீதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமீர் இராச்சியத்தில் இருந்து மீண்டும் உதவி

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளுடன்,  ஐக்கிய அரபு அமீர் இராச்சியத்தில் இருந்து  இரண்டாவது முறையாகவும் விமானமொன்று செவ்வாய்க்கிழமை (02) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

மக்களே அவதானம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவும் கடுமையான ஆபத்து உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எம்.எஃப்புடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள்: சஜித்

அண்மைய பேரழிவையடுத்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதியதொரு திட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்தவகையில் சர்வதேச நாணய நிதியமுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறும் புதியதொரு ஒப்பந்தத்துக்குச் செல்லுமாறும் கூறியுள்ளார்.

யாழில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை; அறுவர் கைது

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர்.

“சிறையில் சித்திரவதைக்குள்ளாகும் இம்ரான் கான்”?

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமுடன் உள்ளார், ஆனால், அவரை மன ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர் என்று அவரது சகோதரி உஸ்மா கான் தெரிவித்துள்ளார்.

தப்போவ பாலத்தின் தற்காலிக கட்டுமானம்

கனமழை காரணமாக இடிந்து விழுந்த தப்போவ  பிரதான பாலத்தில் தற்காலிக இரும்புப் பாலம் கட்டப்பட்டு வருவதாக வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் அறிவிப்பு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10ஆவது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் காலம் 2025.12.15 வரை நீட்டிக்கப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்றவருக்கு எதிராக வழக்கு

ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.  குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, 356 பேர் காணாமல் போயுள்ளனர்.  இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.