இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துப் பெறப்படும் கடன்களின் அளவு சுமார் 35,145 கோடி ரூபாயினால் அதிகரித்துள்ளதாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். இது சதவீத அடிப்படையில் சுமார் 54 சதவீத அதிகரிப்பாகும்.