இலங்கை தன் கடன் மறுசீரமைப்பில் கானாவை பின்பற்றுமா?

(ச.சேகர்)

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடிக்கப்பட்ட நிதி வசதி கடந்த வாரம் கிடைத்திருந்தது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டிருந்த முதற்கட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தின் நிதி வசதி வழங்கப்பட்டிருந்ததுடன், நான்கு ஆண்டுகளுக்கு தொடரும் இந்தத் திட்டத்தினூடாக மொத்தமாக பெற்றுக் கொள்ளும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு 4 முதல் 10 வருட கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.