யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்ற நீர்வளக் கண்காட்சிக்குச் சென்றபோது, எமது குளங்களையும், அவற்றுடன் தொடர்புடைய நிலத்தடி நீர்வளத்தையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக மிகவும் பயனுள்ளதொரு அறிவூட்டலான அமர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.குறிப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் தெளிவாகவும், எளிமையாகவும் பல முக்கியமான விடயங்களை விளக்கிக் கூறினார்கள்.
