இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் வந்தடைந்தார்

இந்தியாவும் இலங்கையும் பிராந்திய பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் வலுவான மக்கள் இடையேயான தொடர்புகள் ஆகியவற்றைக் கொண்ட ஆழமான நாகரிகத் தொடர்புகளையும் பன்முகக் கூட்டாண்மையையும் பகிர்ந்து கொள்கின்றன.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு உதவியபோதும், 2025ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட ‘டித்வா’ (Ditwah) புயலின் பேரழிவின்போது முதலாவதாக உதவிகளை வழங்கியபோதும் இருதரப்பு உறவுகள் மேலும் வேகம் பெற்றன.

இது இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், ‘அண்டை நாடுகள் முன்றமை’ (Neighbourhood First) கொள்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் மகாசாகர் (MAHASAGAR – Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) தொலைநோக்குப் பார்வைக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணமானது, வலுவான கடல்சார் மற்றும் பாதுகாப்புப் கூட்டாண்மை உள்ளிட்ட பரஸ்பர அனுகூலமான துறைகளில் பாரம்பரியமாகவே வலுவான மற்றும் நட்புறவான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும்.

Leave a Reply