பிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை

சம்பந்தன் – விக்கி பேச்சு தோல்வி

பங்கேற்ற கூட்டமைப்பினரிடம் விளக்கம் கோருகிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், கூட்டமைப்புக்குள் விரிசல் வலுவடைந்துள்ளமை தெளிவாகியிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(“பிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில், யாழ்ப்பாணத்தில், உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் அரசியல், ஊடகப் பரப்பில், வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட விதம், இந்த அமைப்பை உருவாக்கியுள்ளவர்களின் பின்னணி, இதன் அடிப்படை நோக்கம் என்பன நீண்ட விவாதங்களுக்குரிய விடயங்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

(“தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் கதவு திறந்துள்ளது – சி.வி

தமிழ் மக்கள் பேரவை கொண்டுள்ள எண்ணங்கள், கொள்கைகள் கொண்ட யார் வேண்டுமானாலும் இதில் இணைந்து செயற்பட முடியும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சரும் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ‘இங்கு யாரும் பின்வாசலால் வரவில்லை அனைவரும் முறையாக அழைக்கப்பட்டு முன்வாசல் வழியேதான் வந்தார்கள். எனவே, சுமந்திரனும் விரும்பினால் இந்த அமைப்பில் இணையலாம். அவர் தனது நிலைப்பாட்டை எம்மிடம் வெளிப்படுத்துவாரேயானால் நாம் அவருக்கும் அழைப்பு விடுப்போம்’ என்று முதலமைச்சர் கூறினார்.

(“தமிழ் மக்கள் பேரவையின் கதவு திறந்துள்ளது – சி.வி” தொடர்ந்து வாசிக்க…)

தை மாதம் மனநிம்மதி – மார்கழி மாதம் மனகிலேசம்

2015 ம் ஆண்டு எம்மை விட்டு விடைபெற இன்னம் சில தினங்களே உள்ள வேளையில் நடந்தேறிய நிகழ்வுகள், இதுவும் எம்மை துன்பத்தில் இருந்து முழுமையாக விடுபட உதவாத ஆண்டு என்றே அறிவித்து செல்கிறது. 2009 ல் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கபட்டனவே தவிர அரசின், அதன் ஆதரவு செயற்பாட்டாளரின் அத்துமீறல்கள் ஓயவில்லை. அவை தான்தோன்றித் தனமாக நடந்தன. வல்லவனுக்கு வல்லவரான சர்வதேச சண்டியர் ஏற்பாட்டில் இரத்தம் சிந்தாத ஆட்சி மாற்றம் அரங்கேறி 2015 தை மாதம் 8ம் திகதி புதிய தலைவர் தலைமையில் நல்லாட்சி அமைந்தது. அதனால் எம்மவருக்கு மன மகிழ்ச்சி ஏற்பட்ட போதும் அது நிலைத்து நீடிக்குமா என்ற கேள்வியுடன் 2015 மார்கழி மாத நிகழ்வுகள் மனகிலேசத்தை ஏற்படுத்தி தெற்கிலும் வடக்கிலும் கொதி நிலை நீடிக்கிறது.

(“தை மாதம் மனநிம்மதி – மார்கழி மாதம் மனகிலேசம்” தொடர்ந்து வாசிக்க…)

கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 2

கம்பவாரிதிக்கு அன்பு வணக்கம்!

பாவத்தைப் பார்த்திருப்பதும் பாவம் என்ற மார்ட்டீன் லூதர் கிங்கின் மெய்யுரையின் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு அரசியல்வாதிகளால் இழைக்கப்படும் அநீதிகள், ஏமாற்றங்கள் தொடர்பில் தமிழ்மக்கள் பலரும் வெறுப்புக்கொண்டிருந்தனர். போர் தந்த இழப்புக்கள் எழுந்து நின்று துணிந்து பேசுகின்ற எங்கள் வீரத்தை வீழ்த்தியிருந்தது. இத்தகையதோர் சூழ்நிலையில் பக்கத்திருப்பவர் துன்பந்தனை பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி என்ற பாரதியின் வரிகள் எங்கள் இதயத்தைத் தொட்டுத் துளைத்தன.

(“கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 2” தொடர்ந்து வாசிக்க…)

என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை

சோக நினைவின் 11ம் வருட நிறைவு

உலகில் மனிதனினால் வெல்ல முடியாதது அடைய முடியாதது என்று கூறத்தக்கவை எவையும் இல்லை என்பதை காலத்திற்கு ஏற்றால் போல் விஞ்ஞான சமுதாயம் எடுத்துக்கூறி வருகின்றது. விஞ்ஞானத்தையும் உடைத்தெறிக்கூடிய சக்தி பஞ்சபூதங்களுக்கு உண்டு என்பதை அவ்வப்போது இயற்கை எமக்கு காட்டிக்கொண்டுதான் உள்ளது.

(“என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை” தொடர்ந்து வாசிக்க…)

கும்பகர்ணர்கள்

(மொஹமட் பாதுஷா)

நாடாளுமன்றத்துக்கு செல்கின்ற நம்முடைய எம்.பி.க்களில் சிலர், எல்லா வரப்பிரசாதங்களையும் சிறப்புரிமைகளையும் உயர்ந்தபட்சமாக உபயோகப்படுத்துகின்ற போதிலும் சபையில் உரையாற்றுதல் என்ற சிறப்புச் சலுகையை மட்டும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த பொடுபோக்குத்தனம் எம்மில் பலருக்கு அதிகமாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தின் ‘ஹன்சாட்’ பதிவேடுகளைப் பரிசோதித்தால் – முஸ்லிம்களின் தேசிய தலைவர்களும் பிராந்திய தளபதிகளையும் எத்தனை தடவைகள் தத்தமது ஆசனங்களில் இருந்து எழுந்து மக்களுக்காக பேசியிருக்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை விலாவாரியாக அறிந்து கொள்ளலாம்.

(“கும்பகர்ணர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

சிம்புவை கைது செய்ய தனிப்படைகள்

‘பீப் பாடல்’தொடர்பான புகாரில் நடிகர் சிம்புவை கைது செய்ய போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நடிகர் சிம்பு பாடிய ‘பீப் பாடல்’ யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

(“சிம்புவை கைது செய்ய தனிப்படைகள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் ஆண்கள் பேரவை

நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 வீத பெண்களையும், மொத்த வாக்காளார்களில் 58வீத பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல் இருக்கிறார்களா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்பது எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது. தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக பெண்கள் வகிக்க வேண்டிய அரசியல் பாத்திரம் ஆண்களால் மறுக்கப்பட்டே தான் வந்திருக்கிறது. அத்துடன் சிறுபான்மை மக்களுக்கு சிறு நன்மையேனும் ஆண் அரசியல் தலைமையால் கிடைக்கவில்லை. இன்று பிரச்சனை தீரும், நாளை விடிவு வரும் என்று கூவிக் கூவி வாக்கு வேட்டை நடத்துவது மட்டுமே நாம் காலம் காலமாகக் காணும் யதார்த்தம்.

(“தமிழ் ஆண்கள் பேரவை” தொடர்ந்து வாசிக்க…)

மக்களின் முன்னால் இன்னொரு ‘மண்குதிரை’

(ப. தெய்வீகன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்ட குழுவினர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர்.
இந்த அமைப்பானது ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும் எந்தக் கட்சிக்கும் மாற்றீடானதோ போட்டியானதோ அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பில் கலந்துகொண்டவர்களின் முன்னுக்கு பின் முரணான பேட்டிகளும் அவர்கள் கடந்த காலங்களில் வலியுறுத்திவந்த விடயங்களின் பின்னணிகளும் பேரவையின் எதிர்காலமும் நோக்கமும் எந்தத் திசையை நோக்கியவை என்பதை தெளிவாகவே வெளிக்காட்டி நிற்கின்றன.

(“மக்களின் முன்னால் இன்னொரு ‘மண்குதிரை’” தொடர்ந்து வாசிக்க…)